Skip to main content

கலையிழந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம்!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

காஜா புயல் பாதிப்புக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு குறைந்த அளவே பறவைகள் வந்து செல்வதாக வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும், வெகுவாக கவலையடைய செய்துள்ளது.

 

 Kotiyakarai Bird Sanctuary

 

நாகை மாவட்டம்  வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருக்கிறது பறவைகள் சரணாலயம். அங்கு ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து போவது வழக்கம்.

 

இதுகுறித்து கணக்கெடுப்பு பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், " மழைக்காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைகாலம் துவங்கும் மார்ச் மாதம் வரையிலும் கோடியக்கரையில் தங்கி சீசனை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். சைபீரியா, ஈரான் ,ஈராக் ,நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பறவைகள் வருகைதந்து சுற்றுளாபயணிகளை மகிழ்விற்கும்.  4 அடி உயரமுள்ள அழகிய பூநாரையே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிசிறப்பு சேர்க்கும்.

 Kotiyakarai Bird Sanctuary

 

கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை பர்மாவில் இருந்து சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம் என 247 வகையான பறவைகள் இங்கு ஆண்டு தோறும் வந்து செல்லும்.

 

 247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பபறவைகளும் 200க்கு மேற்பட்ட நீர் பறவைகளும் வந்து போவது வழக்கம். இதில் ஆலா மற்றும் கிரீன்சன்ங் உள்ளிட்ட ஆறு வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சுபொரித்து, குஞ்சிகளோடு செல்லும் மற்ற அனைத்து பறவை வகைகளும்  சீசன் காலத்தில் தங்கிவிட்டு மட்டுமே செல்லும். முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் முதலாவது குஞ்சுப்பறவைகளை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் தூண்டுதலால் அனுப்பிவிடும், அதன்பிறகே தாய் பறவைகள் செல்லும். இப்படி உண்ணதமான சரணாலயம் சேதமாகியதால் கலையிழந்துக்கிடக்கிறது. அதனால் பறவைகளின் வரவும் குறைந்துவிட்டது."என்கிறார் அவர்.

 

கோடியக்கரையில் பறவைகள் சரணாலத்தைப்போல் விலங்களுக்கான சரணாலயமும் சிதைத்துள்ளது. அங்குள்ள மீனவர் ஒருவர் கூறுகையில், " எங்க ஊருக்கான சிறப்பு பறவைகள் சரணாலயமும் விலங்குகள் சரணாலயம் தான். அதன் பிறகுதான் மீன்பிடித்தொழில். எங்களுக்கான வாழ்வாதாரம் அழிந்தது ஒருபுறம் இருந்தாலும்  புயலால் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்துவிட்டன. அதனால் பறவைகளுக்கான சுதந்திரம் மற்றும் சுகபோக நிலை மாறிவிட்டது. அதனால் வந்த பறவைகள் அனைத்துமே இடம்பெயர்ந்து விட்டன.  தற்போது உள்ளூர் பறவைகளையும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இங்கேயே தங்கியிருக்கும் பறவைகளை மட்டும்  கணக்கெடுக்கிறாங்க. 

 

"கஜாபுயல் பொதுமக்களை மட்டும் நாசப்படுத்தவில்லை விலங்குகளையும் பறவைகளையும் சேர்த்தே அழித்து விட்டு சென்றிருக்கிறது. கோடியக்காடு பழமையான நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் ".என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போகுமிடமெல்லாம் ஆளுநருக்கு கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
A black flag for the governor wherever he goes; Police build up

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

நாகை மாவட்டத்தில் வெண்மணி, வேளாங்கண்ணி, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலையிலேயே கீழ்வெண்மணி நினைவிடப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநர் கலந்து கொள்ள இருக்கக்கூடிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.