Skip to main content

மீன்குழம்பால் ஏற்பட்ட விபரீதம்... கணவன் தற்கொலை... மருத்துவமனையில் மனைவி...

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

police

 

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்ததால் மனைவியை கணவன் தாக்கிவிட்டு, அச்சத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி துர்கா அதேபகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குடிக்கு அடிமையான குமார் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி துர்காவுடன் சண்டையிடுவது வழக்கம். அதே நேரம் குடிக்கு அடிமையான குமார் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்  என்றும் கூறப்படுகிறது. 

 

police

 

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை எப்பொழுதும் போல மது அருந்திவிட்டு குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது மனைவி துர்கா மீன் குழம்பு வைத்து உணவு பரிமாறியதாகக் கூறப்படுகிறது. ஆடி கிருத்திகையான இன்று ஏன் மீன்குழம்பு வைத்தாய் என்று குமார் துர்காவை மிரட்டிய நிலையில், இந்த வாக்குவாதம் முற்றி குமார் துர்காவை தாக்கியுள்ளார். இதனால் துர்கா அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். தந்தை தாய் சண்டையிடுவதை அறிந்து மகன்கள் இருவரும் அருகில் உள்ள தாயின் சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டனர். மனைவி சரிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார், மனைவி இறந்துவிட்டதாகக் கருதி அச்சத்தில் தூக்கிட்டுக்கொண்டுள்ளார். 


சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள், குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருக்க, தாய் பலத்த காயத்துடன் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். இதனைக்கண்டு சிறுவர்கள் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர்  போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீஸார் குமாரின் சடலத்தை மீட்டு கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். துர்கா மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.