Skip to main content

திருச்சி புதிய பேருந்து நிலையம் பிரச்சனையில் அரசியல் சூட்டை கிளப்பிய கே.என்.நேரு..!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
kn nehru


கடந்த தி.மு.க. ஆட்சியில் திருச்சி மக்களின் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்த புதிய பேருந்து நிலையம் என்கிற திட்டத்தை ஆட்சி முடிகின்ற கடைசி நேரத்தில் அப்போது அமைச்சராக இருந்த கே.என்.நேரு தலைமையில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பஞ்சப்பூர் பகுதியில் அடிக்கல் நாட்டினார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஜெ. தலைமையின ஆட்சி தி.மு.க. கொண்டு வந்த இடத்தை தவிர்த்து விட்டு புதிய இடத்தை தேர்வு செய்கிறோம் என்று சொல்லி அப்படியே கிடப்பில் போட்டது.

ஆனாலும் திருச்சி மக்களின் மிக முக்கியமான பிரச்சனையாக இது விஸ்வரூபம் எடுக்கப்பட்ட நிலையில் ஆட்சி முடிகிற கடைசி நேரத்தில் திருச்சி எம்.பி.யாக இருக்கும் குமார் தனக்கு வேண்டப்பட்ட தன் உறவினர்கள் இருக்கும் பகுதியில் பேருந்து நிலையத்தை கொண்டு போக வேண்டும் என்கிற எண்ணத்தில் தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது முதல்வருக்கு செயலாளராக இருக்கும் ஜெயஸ்ரீமுரளிதரன் ஆகியோர் துணையோடு திருச்சி மத்திய சிறைச்சாலை இருக்கும் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டு தற்போது அதற்கான ஆய்வு பணி வெகுவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 

bustand


இந்த நிலையில் திருச்சி பெண்கள் தின விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,

உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உருவாக்கியவர் கலைஞர். சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் ஆதரவு தரும் இயக்கம் தி.மு.க. தான். தற்போது குழப்பமான நிலையில் தமிழகம் உள்ளது. முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியான நபர் மு.க.ஸ்டாலின் தான். தற்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணி தான் மதசார்பற்ற அணி. விரைவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று யூகங்கள் வருகின்றன.

பெண்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம். தி.மு.க. ஆட்சி இருந்தால் தான் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே வரும் தேர்தலில் நீங்கள் இந்த முறை சரியான முடிவை எடுக்க வேண்டும். திருச்சி ஜெயில்கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்போவதாக தற்போதைய அரசு முடிவெடுத்துள்ளது. நெருக்கடி மிகுந்த அந்தப்பகுதியில் பஸ் நிலையம் அமைத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகுவார்கள். அங்கு தற்போதைய அரசு பஸ் நிலையம் அமைக்காவிட்டால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியூர், நகர பஸ்களும், ஆம்னி பஸ்களும் நிற்பதற்கு தனி இடவசதியுடன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். ரெட்டமலை கோவிலுக்கு செல்வதற்கு சாலை வசதி, பஸ் வசதி செய்யப்படும் என்று பேசி பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.