Skip to main content

சமூக மாற்றத்திற்கான திறவுகோல் நூலகங்களில் உள்ளது - கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
marx

 

 உலகில் நடந்துள்ள பல்வேறு சமூக மாற்றங்களுக்கான திறவுகோலாக நூலகங்கள் இருந்துள்ளது என்றார் கவிஞர் நா.முத்துநிலவன். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தியில் இளைஞர்களின் முயற்சியால் ‘கூடு’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட பொது நூலகத்தை வியாழக்கிழமையன்று திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:

’’மாணர்வர்களுக்கு வழிகாட்டியாகவும், படிக்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு வாழ்க்கையின் திசைகாட்டியாகவும் திகழ்வது நூலகங்கள். இரண்டாயிரம் ஆண்டுகால சிந்தனைப் போக்குகளை மாற்றிப்போட்ட காரல் கார்க்ஸ், இந்திய அரசியல் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், தேசத் தந்தை காந்தியடிகள், முதல் பிரதமர் நேரு போன்ற தலைவர்களெல்லாம் நூல்களின் மூலமாகவே சிந்தனை வளம்பெற்றனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ஏராளமான எழுத்தாளர்களும், கவிஞர்களும் நூலகப் பள்ளியிலேயே நுண்ணிய அறிவைப் பெற்றனர்.

 

தொலைக்காட்சி ஊடகம் படிப்பவர்களையெல்லாம் வெறும் பார்வையளர்களாக மாற்றிவிட்டது. வாசித்து, வாசித்து வசப்பட்ட சிந்தனையே புதிய படைப்புகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களின், சுய முன்னேற்றத்திற்கும், சமூகப் பார்வைக்கும் நூலகங்களே உதவும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள இடையாத்தி வடக்கு கிராமத்து இளைஞர்கள், பொதுமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனி உங்களின் நேரத்தை வீணாக்காமல் இந்தக் கூட்டில் வந்தமர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.      

 

விழாவுக்கு ரெ.பெ.கருப்பையா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெ.துரைராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜா, ரோட்டரி சங்கத் தலைவர் ஞானசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் சு.மதியழகன் எம்.ஸ்டாலின் சரவணன், துரை.அரிபாஸ்கர், சாமி கிரீஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், எழுத்தாளர் அண்டனூர் சுரா அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் சி.புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்;.  
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Poet statue for Tamiloil says CM M.K.Stalin

 

கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும்,பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

 

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

 

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதனையடுத்து கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.