கடந்த மூன்று தினங்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் கூறியது சரித்திர உண்மை என தொடர்ந்து கமலும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹஎச்.ராஜா,
கமல் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது. நான் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறேன் என கமலே முன்பு ஒருமுறை கூறியுள்ளார். எனவே ஒவ்வொரு இந்துக்களும் இதை புரிந்துகொண்டு கமலை புறக்கணிக்க வேண்டும்என தெரிவித்தார்.