Skip to main content

ஐந்து பெண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாணராமன் -நான்காவது மனைவி புகார்!

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

 Kalyanaraman cheated five women - fourth wife complains!

 

கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் புதுச்சேரி அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் 'புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42), அவருடைய தாயார் வசந்தா ஆகிய இருவரும் காயத்ரி வீட்டிற்கு பெண் கேட்டுவந்தனர். அப்பொழுது  உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் பெண் கொடுக்க சம்மதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 27.07.2020 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது 21.08.2020 அன்று புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  அப்பொழுது கரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லை. 

 

அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வரதட்சணையாக 6 பவுன் தங்க நகை, இரு சக்கர வாகனம் மற்றும் பீரோ கட்டில் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் காயத்ரியிடம் அதிகப் பணம், அதிக நகை கேட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து காயத்ரி தன் தாயிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக தாய் காயத்ரியின் மாமியார் வீட்டிற்கு வந்து அவர்களிடம்  பேசி காயத்ரியை தன் வீட்டிற்கு  அழைத்துச் சென்றார். அப்பொழுது  காயத்ரி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.  தாய் வீட்டிற்கு வந்த பிறகு கணவர் என்னை வீட்டிற்கு வந்து பார்க்கவுமில்லை,  பேசவும் இல்லை. ஆதலால் காயத்ரி ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டதற்கு, ' நீ எனக்கு மனைவியே இல்லை'  என்று  உதாசீனப்படுத்தினார்.

 


கணவர் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் முதல் மனைவி அனிதா என்கிற இந்திரகுமாரி,  இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவல்லி ஆகியோரை திருமணம் செய்ததும், தன்னை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து காயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது புதுச்சேரி வம்பாகீரபாளையத்தை சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதியை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.

 


காயத்ரியை திருமணம் செய்யும் போது முதல் மனைவி அனிதாவுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி  திருமணம் செய்துள்ளார். ஆனால்  இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. இப்படித் தொடர்ந்து ஐந்து  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்டபோது  அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் திட்டம் போட்டு உள்ளார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து பல பெண்களை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்து வருகிறார். மேலும் இவர் மீது மூன்று சீட்டு லாட்டரி விற்பனை சம்பந்தமாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது.  இந்த புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.