Skip to main content

மணல் திருடர்களுடன் கூட்டு... மதுபோதையில் வாக்கி டாக்கியைப் பறிகொடுத்த தலைமைக் காவலர்!

Published on 25/09/2021 | Edited on 27/09/2021

 

Joint with sand thieves ... Chief Constable who snatched a walkie talkie under the influence of alcohol!

 

மணல் திருடர்களுடன் கூட்டு சேர்ந்து மது குடித்த இடத்தில் வாக்கி டாக்கியை மணல் திருடர்களிடமே பறிகொடுத்துவிட்டு மது போதையில் விழுந்து எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தலைமைக் காவலர். தலைமைக் காவலருக்கு மது ஊற்றிக் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த வாக்கி டாக்கியைத் திருடிய 4 மணல் திருடர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் தலைமைக் காவலர் அன்பழகன். இவர், அப்பகுதி மணல் திருடர்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பவர். சம்பவ நாளிலும் சில மணல் திருடர்களிடம் பேசியுள்ளார். யாரும் இவரைக் கவனிக்கவில்லை. அதன் பிறகு வழக்கமாக சிக்காத திருட்டு மணல் வாகனம், சம்மட்டி விடுதி காவல் எல்லையில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகு சிறிது நேரத்தில் தலைமைக் காவலர் அன்பழகனை ஒரு பேக்கரிக்கு அருகே வரச்சொல்லி அழைத்த மணல் திருடும் கும்பல், “உங்களுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்று எங்கள் வாகனத்தைச் சிக்கவைத்துவிட்டீர்கள். நீங்களே மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டவர்கள், கூடவே மது விருந்தும் நடத்தியுள்ளனர். மது போதை அதிகமான நேரத்தில் மணல் வாகனம் மீட்கப்படாமல் போனதால் காவல்துறையிடம் இருந்த வாக்கி டாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி வைத்துக்கொண்டனர்.

 

வாக்கி டாக்கி திருடப்பட்டது தெரியாமல் அங்கிருந்து சென்ற தலைமைக் காவலர் அன்பழகன், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றித் தெரியாத கீரனூர் காவல் நிலைய காவல்துறையினர் அன்பழகனைத் தேடிக் கண்டுபிடித்து வாக்கி டாக்கி பற்றி கேட்க, அதன் பிறகே வாக்கி டாக்கி காணாமல்போனது தெரிந்திருக்கிறது தலைமைக் காவலருக்கு. உடனே அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவருடன் மது குடித்த 4 பேரைத் தேடிப் பிடித்து விசாரித்தபோது, சம்மட்டி விடுதியில் பிடிபட்ட மணல் வாகனத்தை மீட்பதற்காக அன்பழகனை அழைத்துச் சென்றோம். ஆனால் வாகனத்தை மீட்டுத்தரவில்லை. அதனால் எங்களுடன் சேர்ந்து மது குடிக்க வைத்து அவரிடம் இருந்த வாக்கிடாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி பெங்களூருவில் ஒரு குவாரி மணலில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறி வாக்கி டாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளனர். 

 

சம்பவம் குறித்து கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷின் புகாரின் பேரில் மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவுசெய்து இன்பசுரேஷ், முகேஷ் கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய நான்கு பேரை கைது செய்தார். இதில் முகேஷ் கண்ணன், அதிமுக ஐ.டி. விங்க் பிரமுகராவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.