Skip to main content

"இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது!" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

lkj

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை இன்னும் தீவிரமாக இருந்துவருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றதுபோல் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், "எந்தக் காரணம் கொண்டும் இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் பெரிய அளவில் தண்ணீர் வெளியேற்றத்திற்கு வாய்ப்பில்லை. நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். அதிகப்படியான நீர் வந்தாலும் அதனை பகல் நேரத்தில் வெளியேற்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெயில்ல தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா!”-சுடச்சுட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிரச்சாரம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 "Don't get too hot!"- Minister K.K.S.S.R. Propaganda

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்தியா கூட்டணியின்  காங்கிரஸ்  வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரப்புரை செய்தார்.  

அப்போது பேசிய அவர், “உங்களைப் பார்க்கிறதுக்காக வந்திருக்கோம். நீங்க யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? எங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறீங்க. நாங்க உங்கள பார்க்காம இருந்தோம்னு வச்சிக்கங்க.. வைவீக. இந்தப் பயலுகளுக்கு எவ்வளவு மப்பு இருந்தா ஓட்டு கேட்க கூட வரலைன்னு வைவீக. அதுக்காகத்தான்.. மாணிக்கம்.. கொஞ்சம் வெயிலா இருந்தாலும் பரவாயில்லன்னு கூட்டிட்டு வந்திருக்கேன்.  தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா. எல்லாரும் பார்த்தீங்கன்னா நம்ம சொந்தங்கதான். பார்க்காதவங்க கிடையாது. சாத்தூர்ல இருக்கிற அத்தனை பேரும் எனக்கு சொந்தக்காரங்கதான். சொந்தங்கள் என்ற உரிமையில்தான் உங்ககிட்ட ஓட்டு கேட்க வந்திருக்கோம். உங்களுக்கு வேண்டியது எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறோம். எல்லாரும் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க” என்று வாக்கு சேகரித்தார். 

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.