Published on 30/11/2021 | Edited on 30/11/2021
![IPS officers relocated!](http://image.nakkheeran.in/cdn/farfuture/aqUamk24NdjipDuYk9A_Qs2H2q-lrcyjYSzF_zrrr1o/1638274967/sites/default/files/inline-images/th_1442.jpg)
தமிழக காவல்துறை உயரதிகாரிகளான ஐ.பி.எஸ். அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.
அவரின் உத்தரவின்படி, சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக ஆறுமுகசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.