Skip to main content

இயந்திரத்தை இயக்க தடுமாறிய பயிற்றுநர்... விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அமைச்சர்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Instructor who stumbled to run the machine ... Minister ordered to send notice asking for explanation

 

திண்டுக்கல் நத்தம் சாலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆண், பெண் இருபாலருக்கும் என தனித்தனியாகத் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.கணேசன், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயிலும் மாணவர்களுக்கு இடவசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி, பயிற்சி மையம், வகுப்பறைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினர். பின்னர் ஆய்வுக் கூடங்களுக்குச் சென்று இயந்திரங்கள் இயங்குவது தொடர்பாக மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.

 

அப்பொழுது கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கக்கூடிய இயந்திரத்தை இயக்குமாறு பயிற்றுநரிடம் அமைச்சர் கூறினார். ஆனால் இயந்திரத்தைச் சரியாக இயக்க தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த பயிற்றுநர் கோ.பாலகிருஷ்ணனுக்குக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் உத்தரவிட்டார். அதன் பின் அமைச்சர் கணேசன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் மொத்தம் 90 தொழில் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த 90 தொழில் பயிற்சி பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து அங்குப் பயிலும் மாணவர்களுக்கு இட வசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி இருக்கிறதா என ஆய்வு செய்தோம்.

 

Instructor who stumbled to run the machine ... Minister ordered to send notice asking for explanation

 

எந்தெந்த தொழில் பயிற்சி மையங்களில் என்னென்ன தேவைகள் இருக்கிறது அவற்றை எல்லாம் முழுமையாகக் கணக்கெடுப்பு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவற்றையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்குத் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சரின் நோக்கம் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு முழுமையான வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. இந்த ஆண்டு பயிற்சி பள்ளி முடித்து  அந்த துறையின் மூலமாக ஸ்கில் டெவலப்மன்ட் என்ற புதிய துறையை உருவாக்கி அவர்கள் எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.