Skip to main content

கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி காலில் விழுந்த விவகாரம்; தொழிலாளிக்கு வீடு கட்டித்தரப்படும் ஆட்சியர் உறுதி

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

The incident where a shepherd worker fell on his leg near Kayathar; The collector guarantees that the house will be built for the worker

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பக்கம் உள்ள ஒலைகுளத்தில்  ஆடு திருடு போன விவகாரம் தொடர்பாக அங்குள்ள ஆடு மேய்க்கும் பட்டியலின தொழிலாளி பால்ராஜ் என்பவரை மிரட்டி சிவசங்குவின் காலில் விழுவைத்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து எஸ்.பி. ஜெயக்குமாரின் உத்தரவுப்படி 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒலைக்குளம் சென்ற எஸ்.பி., பால்ராஜூக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பாதுகாப்பும் அளித்தார்.

 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியர் விஜயாவுடன் ஒலைக்குளம் சென்றவர் பால்ராஜூக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னவர், சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

 

மேலும் தொழிலாளி பால்ராஜூக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதுடன், அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

 

மேலும் இன்று சாயங்காலம் ஒலைக்குளம் கிராமத்தில் ஒற்றுமை அமைதியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சமுதாயத்தினரும் அமர்ந்து சாப்பிடும் சமத்துவ உணவு விருந்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.