Skip to main content

ஆற்றுக்குள் நீந்தி சடலத்தை சுமக்கும் அவலம்.. முன்னாள் ராணுவ வீரரின் மகனுக்கு நடந்த சோகம்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

 Shame on the son of a former soldier who swam in the river and carried his body!

 

சுதந்திரமடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இன்னும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனை இருந்து கொண்டே தான் உள்ளது. பல கிராமங்களில் முக்கியமான பிரச்சனை இடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை என்பது தான். பாதை வசதி இல்லாததால் நெல் கதிர்களோடு வயல், வரப்பு, ஆறு, வாய்க்கால், சேற்றுக்குள்ளும் இறங்கித் தூக்கிச் சுமக்கிறார்கள். இவர்களின் பல வருடக் கோரிக்கை சுடுகாட்டுக்குப் பாதை என்பதாக இருந்தாலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள வீரியங்கோட்டை கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராக்கன் மகன் மகாலிங்கம் இறந்துவிட்ட நிலையில் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட சொர்க்க ரதத்தில் ஏற்றிச் செல்ல உறவினர்களுக்கு ஆசை தான். ஆனால் நடுவில் கல்லணை கால்வாய் கிளையாற்றில் தண்ணீர் போவதால் அந்த ஆசை நிராசையானது. வீட்டில் இறுதிச் சடங்குகள் செய்த பிறகு பாடையில் ஏற்றித் தூக்கிச் சுமந்த உறவுகள் இடையில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி அடுத்த கரைக்குச் சென்று சுமார் 3 கி மீ தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். யார் இறந்தாலும் இப்படித்தான் ஆற்றில் நீந்தி சடலங்களைச் சுமக்கிறோம் என்றவர்கள் ஒரு பாலம் இருந்தால் இந்த அவல நிலையை மாற்றலாம் என்கிறார்கள்.

 

தமிழ்நாட்டில் இதே பிரச்சனை ஏராளம் உள்ளதால் தமிழக அரசு சிறப்புத் திட்டமாக மயான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் தலைமுறைக்கும் வாழ்த்துவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.