Skip to main content

பேருந்து நடத்துநர் கழுத்தை நெரித்து கொலை! ; தீர்த்துக் கட்டிய காதலி!!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in salem... police investigation

 

சேலம் அருகே, ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, வாழ்க்கைக் கொடுத்தவரையே கழுத்தை நெரித்துத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்துள்ள மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்தார். இவர், 28 ஆண்டுக்கு முன்பு புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 27 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, தளவாய்ப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

 

இவரும், தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த சித்ரா என்பவரின் மகள் உமா மகேஸ்வரி (35) என்பவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் நெருக்கம் அதிகமாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். உமாமகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சில ஆண்டாக தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில்தான் சுப்ரமணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு சுப்ரமணி தனது வீட்டில் உள்ள கட்டிலில் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உறவினர்கள் சென்று பார்த்தபோது சுப்ரமணி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முதல்கட்ட விசாரணையில், சுப்ரமணி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சுப்ரமணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமையன்று இரவு உமாமகேஸ்வரி, 2 ஆண்களை அழைத்து வந்திருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரியை பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

குடும்ப வாழ்க்கையில் பரஸ்பரம் தோல்வி கண்டிருந்த உமாமகேஸ்வரியும்,  சுப்ரமணியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அதன்பிறகு ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடனும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக வெளியே சென்ற நேரங்களில் உமா மகேஸ்வரி, சில ஆண்களை வீட்டுக்கே வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இதையறிந்த சுப்ரமணி, அவரை பலமுறை கண்டித்திருக்கிறார்.

 

இதை கொஞ்சமும் ரசிக்காத உமா மகேஸ்வரி, இனியும் சுப்ரமணி உயிரோடு இருந்தால், தான் நினைத்தபடி மற்ற ஆண்களுடன் சந்தோஷமாக பழக முடியாது என முடிவெடுத்துள்ளார். இதையடுத்து உமாமகேஸ்வரி, அவருடைய ஆண் நண்பர்களான செங்காட்டூரைச் சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோர் மூலம் சுப்ரமணியை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

அதன்படி, ஜூன் 11ம் தேதி இரவு அவர்கள் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுப்ரமணியின் கை, கால்களை ஆண் நண்பர்கள் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, உமாமகேஸ்வரி சுப்ரமணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

 

கொலை திட்டத்தை நிறைவேற்றியதும் ஆண் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ஆனால் உமா மகேஸ்வரி எதுவும் தெரியாததுபோல் அங்கே இருந்துள்ளார். பின்னர் அவரே தன் கணவர் மூச்சு பேச்சின்றி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

தலைமறைவான உமா மகேஸ்வரியின் ஆண் நண்பர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.