Skip to main content

காணாமல்போன குளத்தை கண்டுபிடித்துத் தரக்கோரிய எழுத்தாளர் உட்பட 4 பேர் கைது!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020
incident inpudukottai

 

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிாமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணன் (வயது 55). எழுத்தாளர். இவர் மற்றும் இவரது தாயார் வெள்ளையம்மள் (வயது 78), இவரது சகோதரிகள் முத்துலெட்சுமி (வயது 46), சித்ரா (வயது 44). ஆகிய 4 பேரும் கொத்தமங்கலம் வாடிமாநர் கடைவீதியில் உள்ள ரவுண்டானா அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக கூறி பதாகையுடன் அமர முயன்றனர்.

அப்போது அங்கு வந்த கீரமங்கலம் காவ்உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உண்ணாவிரதம் இருக்க காரணம் கேட்டார். அதற்கு எங்கள் பகுதியில் இருந்த வீரப்பெருமாள் ஊரணியை காணவில்லை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அந்தக் குளம் கண்டுபிடித்து தரும் வரை குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருக்க போகிறோம் என்றனர். மேலும் தனது சொந்த நிலங்களும் சிலர் அபகரித்து வருகிறார்கள். அதுபற்றியும் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை. அதனால் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றார்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்று கூறிய போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கீரமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதம் தொடருவோம் என்று காவல் நிலையத்திலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து கீரமங்கலம் காவல் நிலையம் வந்த ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜ் உண்ணாவிரதம் இருக்க முயன்ற முத்துக்கண்ணணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சில நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்ற வருவாய் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார். தொடர்ந்து மாலை உண்ணாவிரப் போராட்டம் முடிக்கப்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்