Skip to main content

விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவன்... தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு... காவல்துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

madurai

 

மதுரை திருமங்கலம் அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன், மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவத்தில் போலீசாரே காவல்நிலையத்தில் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கிராம மக்கள் 7 மணி நேரமாக உடலை அப்புறப்படுத்த விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இதயக்கனி (வயது 25) என்பவருக்கும் அதே கிராமத்தைச் சார்ந்த புனிதா (20) என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. அன்று முதல் இருவரும் கிராமத்தில் இருந்து வெளியேறி மாயமாகினர். இந்நிலையில் புனிதாவின் பெற்றோர்கள் சாப்டூர் காவல்நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை எனப் புகார் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவம் அறிந்து இதயக்கனியை தேடி வீட்டுக்கு வந்தனர். அங்கு இதயக்கனி இல்லை, பின்பு நேற்று காவல்துறையினர் இதயக்கனி வீட்டிற்கு வந்து அவரது சகோதரரான கல்லூரி மாணவன் ரமேஷை (19) விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரவு முழுவதும் ரமேஷ் வீடுதிரும்பாத நிலையில், கிராமத்திலுள்ள 150 மீட்டர் உயரமுடைய மலையில் உள்ள மரத்தில் கயிற்றில் தொங்கியபடி ரமேஷ் உடலைக் கண்ட அக்கிராம மக்கள் உடனடியாக ரமேஷ் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஒன்று திரண்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விசாரணைக்குச் சென்ற ரமேஷை கொலைசெய்த காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். காவல்நிலையத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் ஜெயக் கண்ணன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யும் வரை ரமேஷின் உடலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று கூறி 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Ad

 

இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, பேரையூர் பகுதி அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கல்லூரி மாணவனைக் காவல்துறையினரே கொலை செய்திருக்கலாம் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சம்பவம் பெரும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.