Skip to main content

ஒரு லட்சம் கட்டினால் ரூ. 4 லட்சம் திருப்பி தருவோம் - விசாரணைக்கு வராமல் தலைமறைவான உரிமையாளர்! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

If one lakh is built, Rs. 4 lakh will be refunded - the undercover owner without coming to trial!

 

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், அவனின் ஆசையை முதலில் தூண்ட வேண்டும் என நாயகன் வசனம் பேசுவார். அதுபோல், ஒரு லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவோம் என ஆசையை மக்களிடம் தூண்டிவிட்டுள்ளது ஒரு கம்பெனி.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் சேவூர் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னால் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏவுமான ராமச்சந்திரன் வசிக்கும் கிராமம். பட்டுப்புடவை உற்பத்தியில் முக்கியமான கிராமமிது. இந்த கிராமத்தில் உள்ள ஒருதனியார் லாட்ஜில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்கிற பெயரில் கடந்த மே 6ஆம் தேதி ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அழகாக டெக்கரேட் செய்யப்பட்ட இந்த அலுவலகத்தின் திறப்புவிழா குறித்து எந்த ஒரு விளம்பரமும் செய்தித்தாள், லோக்கல் சேனல்களில்கூட செய்யவில்லை. ஆனால் கடந்த சிலதினங்களாக அந்த அலுவலகத்தின் முன் கூட்டம் குவிகிறது. 


1 லட்ச ரூபாய் எங்களிடம் கட்டினால், பணம் கட்டிய நிமிடமே 1 கிராம் தங்க காயின் வழங்கப்படும். அது இரண்டு மாதத்துக்கு வழங்கப்படும். அடுத்த 4 மாதங்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 4 மாதங்களுக்கு வழங்கப்படும். 6வது மாதம் முதல் மாதம் 28,500 ரூபாய் வீதம் வழங்கப்படும். இரண்டு வருட முடிவில் டெப்பாசிட் செய்த 1 லட்ச ரூபாய் திரும்பி வழங்கப்படும். வட்டி தொகை சம்மந்தப்பட்டவரின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம் அல்லது நேரில் வந்தும் பெற்றுக்கொள்ளலாம் என கிராமங்கள் தோறும் ஏஜென்ட்கள் மூலமாக வாய்வழி பிரச்சாரத்தை செய்துள்ளனர் இந்த நிறுவனத்தினர். இதனைக்கேட்டு ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், அடேங்கப்பா இவ்ளோ வட்டியா என வாய் பிளந்தபடி ஒவ்வொருவரும் 1 லட்சம், 3 லட்சம் என வந்து டெபாசிட் செய்துள்ளார்கள். 


ஒரு லட்சத்துக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி என்பது ஒரு ரூபாய்க்கு 30 பைசா வட்டி. இவ்வளவு வட்டியெல்லாம் யாராலும் தரமுடியாது, ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்ட சீட் கம்பெனிகள் கூட பொதுமக்களிடம் இவ்வளவு வட்டி வசூலிக்கவோ, தரவோ முடியாது. வட்டி வழங்குவது, பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் லட்ச ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் வட்டி என்றதும் பொதுமக்களில் படித்தவர், படிக்காதவர் என்கிற பாகுபாடின்றி வரிசைக்கட்டி வந்து டெபாசிட் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் சென்றும் அவர்கள் அது குறித்து கண்டுக்கொள்ளவில்லையாம். 


இந்த நிறுவனம் ஆரணி மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு போன்ற இடங்களிலும் இப்படியொரு அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களிடம் வசூல் நடத்திக்கொண்டு இருக்கிறது எனக்கூறப்படுகிறது. 


இதன் உரிமையார் யார் என விசாரித்தவர்களிடம், ராஜசேகர் என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சொந்த ஊர், தற்போது சென்னையில் வசிக்கிறார், முன்பு துபாயில் வேலை செய்தவர், துபாயில் தங்கத்தின் விலை குறைவு, அங்கிருந்து தங்கம் கொண்டுவந்து இங்கே மக்களுக்கு குறைந்த விலையில் விற்கவே இந்த கம்பெனியை தொடங்கியுள்ளார் என வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் சொல்லியுள்ளார்கள்.


பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாததை பொய் சொல்லி மக்களிடம் பணம் டெபாசிட் பெறுவது குறித்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் சார்பாக காவல்துறையினரிடம் புகார் சொல்ல முடிவு செய்துள்ளனர். விவகாரம் பெரியதானதும் இதுபற்றி காவல்துறை, வருவாய்த்துறை போன்றவை விசாரணையில் இறங்கின. மக்களிடம் டெபாசிட் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் பெறப்பட்ட அனுமதி ஆணை உள்ளதா என ஆரணி கிளை மேலாளர் அசோக்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.


இதுகுறித்து உரிமையாளர் ராஜசேகரிடம் தகவல் கூறி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். மே 13 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை, வருவாய்த்துறை வாய்மொழியாக உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஆவணமும் கொண்டுவரவில்லை. அதுமட்டுமின்றி நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவுமில்லை. அதனை தொடர்ந்து மே 14ஆம் தேதி அதிகாரிகள் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.