Skip to main content

ஒரு லட்சம் கட்டினால் ரூ. 4 லட்சம் திருப்பி தருவோம் - விசாரணைக்கு வராமல் தலைமறைவான உரிமையாளர்! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

If one lakh is built, Rs. 4 lakh will be refunded - the undercover owner without coming to trial!

 

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், அவனின் ஆசையை முதலில் தூண்ட வேண்டும் என நாயகன் வசனம் பேசுவார். அதுபோல், ஒரு லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவோம் என ஆசையை மக்களிடம் தூண்டிவிட்டுள்ளது ஒரு கம்பெனி.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் சேவூர் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னால் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏவுமான ராமச்சந்திரன் வசிக்கும் கிராமம். பட்டுப்புடவை உற்பத்தியில் முக்கியமான கிராமமிது. இந்த கிராமத்தில் உள்ள ஒருதனியார் லாட்ஜில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்கிற பெயரில் கடந்த மே 6ஆம் தேதி ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அழகாக டெக்கரேட் செய்யப்பட்ட இந்த அலுவலகத்தின் திறப்புவிழா குறித்து எந்த ஒரு விளம்பரமும் செய்தித்தாள், லோக்கல் சேனல்களில்கூட செய்யவில்லை. ஆனால் கடந்த சிலதினங்களாக அந்த அலுவலகத்தின் முன் கூட்டம் குவிகிறது. 


1 லட்ச ரூபாய் எங்களிடம் கட்டினால், பணம் கட்டிய நிமிடமே 1 கிராம் தங்க காயின் வழங்கப்படும். அது இரண்டு மாதத்துக்கு வழங்கப்படும். அடுத்த 4 மாதங்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 4 மாதங்களுக்கு வழங்கப்படும். 6வது மாதம் முதல் மாதம் 28,500 ரூபாய் வீதம் வழங்கப்படும். இரண்டு வருட முடிவில் டெப்பாசிட் செய்த 1 லட்ச ரூபாய் திரும்பி வழங்கப்படும். வட்டி தொகை சம்மந்தப்பட்டவரின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம் அல்லது நேரில் வந்தும் பெற்றுக்கொள்ளலாம் என கிராமங்கள் தோறும் ஏஜென்ட்கள் மூலமாக வாய்வழி பிரச்சாரத்தை செய்துள்ளனர் இந்த நிறுவனத்தினர். இதனைக்கேட்டு ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், அடேங்கப்பா இவ்ளோ வட்டியா என வாய் பிளந்தபடி ஒவ்வொருவரும் 1 லட்சம், 3 லட்சம் என வந்து டெபாசிட் செய்துள்ளார்கள். 


ஒரு லட்சத்துக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி என்பது ஒரு ரூபாய்க்கு 30 பைசா வட்டி. இவ்வளவு வட்டியெல்லாம் யாராலும் தரமுடியாது, ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்ட சீட் கம்பெனிகள் கூட பொதுமக்களிடம் இவ்வளவு வட்டி வசூலிக்கவோ, தரவோ முடியாது. வட்டி வழங்குவது, பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் லட்ச ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் வட்டி என்றதும் பொதுமக்களில் படித்தவர், படிக்காதவர் என்கிற பாகுபாடின்றி வரிசைக்கட்டி வந்து டெபாசிட் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் சென்றும் அவர்கள் அது குறித்து கண்டுக்கொள்ளவில்லையாம். 


இந்த நிறுவனம் ஆரணி மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு போன்ற இடங்களிலும் இப்படியொரு அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களிடம் வசூல் நடத்திக்கொண்டு இருக்கிறது எனக்கூறப்படுகிறது. 


இதன் உரிமையார் யார் என விசாரித்தவர்களிடம், ராஜசேகர் என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சொந்த ஊர், தற்போது சென்னையில் வசிக்கிறார், முன்பு துபாயில் வேலை செய்தவர், துபாயில் தங்கத்தின் விலை குறைவு, அங்கிருந்து தங்கம் கொண்டுவந்து இங்கே மக்களுக்கு குறைந்த விலையில் விற்கவே இந்த கம்பெனியை தொடங்கியுள்ளார் என வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் சொல்லியுள்ளார்கள்.


பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாததை பொய் சொல்லி மக்களிடம் பணம் டெபாசிட் பெறுவது குறித்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் சார்பாக காவல்துறையினரிடம் புகார் சொல்ல முடிவு செய்துள்ளனர். விவகாரம் பெரியதானதும் இதுபற்றி காவல்துறை, வருவாய்த்துறை போன்றவை விசாரணையில் இறங்கின. மக்களிடம் டெபாசிட் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் பெறப்பட்ட அனுமதி ஆணை உள்ளதா என ஆரணி கிளை மேலாளர் அசோக்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.


இதுகுறித்து உரிமையாளர் ராஜசேகரிடம் தகவல் கூறி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். மே 13 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை, வருவாய்த்துறை வாய்மொழியாக உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஆவணமும் கொண்டுவரவில்லை. அதுமட்டுமின்றி நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவுமில்லை. அதனை தொடர்ந்து மே 14ஆம் தேதி அதிகாரிகள் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.