Skip to main content

“30 வருடங்களுக்கு முன்னர் நான் திருமாவளவனை பார்த்து இருந்தால்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

"If I had seen Thirumavalavan 30 years ago.." - Chief Minister M.K.Stalin

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “இன்னும் பல கடமைகள் உள்ளதால் திருமாவளவன் நீண்ட காலம் வாழ வேண்டும். அன்று திமுகவில் இருந்து செயல்பட்டார், இன்று கூட்டணிக்குள் இருந்து செயல்படுகிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்ச வேண்டாம். இது தேர்தல் நட்பு அல்ல, கொள்ளை உறவு. வெற்றிக்கு பிறகும் ஒரு தாய் பிள்ளையாக இருக்கிறோம். ஆரியத்திற்கு எதிரான அனைத்தும் திராவிடம் தான். இதை விட சுருக்கமாக யாரும் சொல்லி விட முடியாது, இதனால் இந்த ஆட்சியை பார்த்தால் கசக்கிறது. 

 

திருமாவளவன் நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லியுள்ளார், ‘பெரியாரை எதிர்ப்பவர்கள் திமுகவையும் எதிர்க்கிறார்கள்’.  இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் திராவிட கருத்தியலால் தான். நான், அதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக் கொள்கிறேன். திமுக 70 ஆண்டு காலம் நிலைத்து நிற்பதற்கு காரணம் இத்தகைய அடித்தளத்தில் நிற்பதால் தான். கோட்டையில் இருந்தாலும், அறிவாலயத்தில் இருந்தாலும் திமுகவின் கொள்கை ஒன்று தான்.

 

ஆர்.எஸ்.எஸ். பாஜக கருத்தியல் எதிர்ப்பை திமுக சிறிதும் சமரசம் செய்ய மாட்டேன். கட்சித் தலைவர், முதலமைச்சர் என இரு பொறுப்பில் உள்ளேன். நான் டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன், கை கட்டி வாய் பொத்தி உத்தரவு பெறவா போறேன், நான் கலைஞரின் பிள்ளை. உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கலைஞரின் வழியில் தான் என்றைக்கும் செயல்படுவோம். நலத்திடங்களுக்காக  மத்திய அரசு - மாநில அரசுக்கும் உறவு உள்ளதே தவிர பாஜகவிற்கு திமுகவிற்கு உறவு இல்லை. ஆகவே திருமாவளவன் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் திமுகவின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டேன், குறைந்த பட்ச சமரசமும் செய்து கொள்ள மாட்டான் உங்களது சகோதரன் ஸ்டாலின். அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண் அச்சகர், குடியுரிமை திருத்த் சட்ட திருத்த எதிர்ப்பு இவையெல்லாம் தான் திராவிட இயக்கத்திற்கு எந்த சமரசமும் இல்லையென்பதற்கு சாட்சிகள். இதனால் தான் சனாதனவாதிகள், வகுப்புவாதிகளால் இந்த அரசு அதிகம் விமர்சனம் செய்யப்படுகிறது. 

 

சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம். இதனை நானும் உங்களோடு சேர்ந்து வழிமொழிகிறேன். இதில் சங்கத்துவம் என்ற சொல் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்புக்கும் எல்லாம் உயர்க்கும் என்ற சங்க கால சக்திக்கு எதிரானது தான் சனாதனம், இதனை ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இது தான் திருமாவளவனின் 60வது பிறந்த நாளின் மிகப்பெரிய கொள்கை பரிசு. இப்போது இருப்பது போல் 30 வருடங்களுக்கு முன்னர் நான் திருமாவளவனைப் பார்த்து இருந்தால் நானே அவருக்கு திருமண செய்து வைத்து இருப்பேன். அது நிகழவில்லை. 

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞரை பார்க்கும் போதெல்லாம் திருமணம் பற்றி பேசுவார். அவர் சொல்லி நடக்காத ஒன்று இவரது திருமணம் தான். ஆனால் அவர் இந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமண செய்துவிட்டார். பல ஊரில் உள்ள சிறுத்தைகள் தான் அவரது குழந்தைகள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது உங்களுக்கு தாயும், தந்தையுமாக உள்ள திருமாவளவனை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.