Skip to main content

"மகன் போல் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்"- மூதாட்டிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

"I look after you like a son" - Minister I. Periyasamy consolation to the grandmother!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், 01/10/2021 அன்று காலை 08.00 மணியளவில் குளித்துவிட்டு ஈரத்துண்டை கொடியில் காய வைக்க கயிற்றில் போட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மின்சாரம் தாக்கி அப்படியே நின்று உள்ளார். அவரை காப்பாற்ற வந்த அவரது இரண்டு மகன்கள் விஜய கணபதி மற்றும் சந்தோஷ் ஆகியோரும் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டனர்.

 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா, அவர்களை காப்பாற்ற வந்த போது அவர்களும் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஐ.பெரியசாமி நேற்று (02/10/2021) இரவு 08.00 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செட்டியப்பட்டிக்கு வந்தார்.

 

அங்கு அவர் கையைப் பிடித்த படி திருப்பதியின் தாயார் கண்ணம்மாள் மகனையும், பேரன்களையும் இழந்து விட்டேன் என உருக்கமாக, கண்ணீருடன் பேசினார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, " நான் மகன் போல் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். கணவரையும், மகன்களையும் இழந்த வசந்தாவிடம் மகன்கள் படித்து கல்லூரிக்குச் செல்லும் போது, அவர்களை இழந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விட்டது. உங்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பாக நிச்சயம் செய்வேன்" என்று உறுதியளித்தார். 

 

அத்துடன், உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாவை அழைத்து அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்பு மின்சாரத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற போய் காயங்களுடன் உயிர் தப்பிய முருன் வீட்டுக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

பின்னர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும், அந்த குடும்பத்திற்கு நிரந்தர வாழ்வாதாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.