Skip to main content

திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனைக் கொலைசெய்த பெண்! - உடந்தையாக இருந்த இளைஞர்களும் கைது!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

Husband passed away his wife and her boy friends arrested by police
மலையரசன்

 

திருச்சுழி தாலுகா – அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம், கடந்த வருடம் வயர்மேன் வேலை கிடைத்து, மதுரை – அரசரடி மின்வாரியத்துறையில் பயிற்சி பெற்றுவந்தார். மலையாளியான இவருடைய மனைவி அனிதாவுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஏற்கனவே கேரளாவில் பாதிரியார் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அனிதா முத்துராமலிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 

 

முத்துராமலிங்கம் மின்வாரியம் பணியில் சேருவதற்கு முன்பு, சொந்தமாக ஒரு ஒர்க்ஷாப்பு வைத்திருந்திருக்கிறார். அங்கே வேலை பார்த்த மலையரசன் என்பவருக்கும் முத்துராமலிங்கம் மனைவி அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பயிற்சிக்காக சொந்த கிராமத்திலிருந்து முத்துராமலிங்கம் மதுரை சென்றுவர, தவறான பழக்கத்தை மலையரசன் மேலும் தொடர்ந்தார். இந்த விவகாரம் முத்துராமலிங்கத்துக்குத் தெரிந்ததும், மனைவியைக் கண்டித்துள்ளார். அதில் கோபம் அடைந்த அனிதா, தனது உறவுக்கு குறுக்கே நிற்கும் கணவர் முத்துராமலிங்கத்தைக் கொலை செய்துவிட, மலையரசனுடன் சேர்ந்து திட்டமிட்டார். 

 

Husband passed away his wife and her boy friends arrested by police
சிவா 

 

கடந்த 1-ஆம் தேதி சொந்த கிராமத்துக்கு வந்த முத்துராமலிங்கம், இரவில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அனிதாவும், மலையரசனும், அவனுடைய நண்பர் சிவாவும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். 2-ஆம் தேதி அதிகாலையில், டூவீலரில் மலையரசனுக்கும் சிவாவுக்கும் நடுவில் முத்துராமலிங்கத்தின் உடலை உட்கார்ந்த நிலையில் எடுத்துச்சென்று, நரிக்குடி – திருச்சுழி சாலை காரேந்தல் பஸ்-ஸ்டாப் அருகில் வீசியெறிந்துவிட்டு, விபத்து நடந்ததைப் போல் செட்டப் செய்துவிட்டு வந்தனர்.

 

காரேந்தல் பஸ்-ஸ்டாப் அருகில் சடலம் ஒன்று கிடக்கும் தகவலறிந்து உடலை மீட்க வந்த திருச்சுழி காவல்நிலையப் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டூவீலரில் எடுத்துச்சென்றபோது, சடலத்தின் இரு கால்விரல்களும் தரையில் உரசியபடியே வந்ததால், கால்கட்டை விரல்கள் முழுமையாகத் தேய்மானம் அடைந்திருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.  விபத்தா? கொலையா? என விசாரணை நடத்தியபோது, விருதுநகரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து நேராக முத்துராமலிங்கம் வீட்டுக்குச் சென்றது. பிறகுதான், அனிதாவிடமிருந்து மேற்கண்ட வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

 

43 வயதான அனிதாவிடம் தகாத உறவு வைத்திருந்த 22 வயது மலையரசன், அனிதாவின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் தான் மட்டுமின்றி தனது நண்பன் சிவாவையும் (வயது 23) கொலை செய்வதற்கு கூட்டுச் சேர்த்துள்ளார். தற்போது அனிதா, மலையரசன், சிவா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.