Skip to main content

34 வயது மூத்தவர் என்பதால் ஒத்துவரவில்லை - அக்காள் கணவருடன் கைதான 3வது மனைவி

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
 arrested



கணவர் 34 வயது மூத்தவர் என்பதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதுடன், அக்காள் கணவருடன் ஏற்பட்ட தொடர்பால் கணவரை கொலை செய்திருக்கிறார் 3வது மனைவி. 
 

திருவள்ளுர் மாவட்டம், மாங்காடு அருகே பட்டூரைச் சேர்ந்தவர் 70 வயதான சாகுல் அமீது. இவரது மனைவி ஜபருனிசா. 36 வயதாகும் இவர் சாகுல் அமீதுக்கு 3வது மனைவி என கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு சாகுல் அமீது திடீரென இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை பூந்தண்டலத்தில் இறுதி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
 

இந்த நிலையில் உறவினர்கள் சிலர் சாகுல் அமீது உயிரிழந்தது குறித்து அறிந்து வந்துள்ளனர். அவர்கள் சாகுல் அமீது உடலை பார்த்து காயம் இருந்ததும், இதுகுறித்து ரகசியமாக போலீசாருக்கு, சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
 

சாகுல் அமீதின் தலையில் காயம் இருந்தது. இதையடுத்து அவரது மனைவியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். விசாரணையில் கணவர் கொலை செய்யப்பட்டதை அவரது மனைவி ஜபருனிசா ஒப்புக்கொண்டார். சாகுல் அமீதின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

போலீசார் விசாரணையில், கணவன் தன்னைவிட 34 வயது மூத்தவர் என்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வயது அதிகம் இருப்பதால் கணவருடன் வாழ்வத ஒத்துவரவில்லை என்ற முடிவுக்கு ஜபருனிசா வந்துள்ளார். இந்த நிலையல் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் தனது அக்காள் கணவர் உசேனுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த விசயம் சாகுல் அமீதுக்கு தெரியவர, அவர் ஜபருனிசாவை கண்டித்துள்ளார்.
 

சாகுல் சமீது கண்டிப்பால் ஜபருனிசா உசேனை சந்திக்க முடியவில்லை. கடந்த வாரம் இவர்கள் சந்தித்தபோது சாகுல் அமீதை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு உசேனை வர சொல்லியிருக்கிறார். அவர் வீட்டில் மறைந்து இருந்துள்ளார். வழக்கம்போல இரவு வந்த சாகுல் அமீதை ஜபருனிசா பிடித்துக்கொள்ள உசேன் கம்பியால் தாக்கியுள்ளார்.
 

உசேன் தாக்கியதில் சாகுல் அமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சாகுல் அமீது உடலை ஒரு வாகனத்தில் எடுத்துக்கொண்டு, வீட்டை பூட்டிக்கொண்டு பூந்தண்டலத்தில் அடக்கம் செய்ய புறப்பட்டுள்ளனர். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். உறவினர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லியதன் பேரில் இவர்கள் இருவரும் பிடிபட்டதாக தெரிய வந்தது. 



 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.