Skip to main content

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர்! 

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

husband and wife incident police investigation

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்- ராஜகுமாரி தம்பதியின் மகள் அபி (என்கிற) ராஜலட்சுமி( வயது 24). இவர் அங்கன்வாடியில் சத்துணவு சமையலகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்த, கொத்தனார் வேலை செய்யக்கூடிய நாகராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

 

இத்திருமணத்திற்கு முன்னதாக ராஜலட்சுமிக்கு வேறு நபருடன் முதலாவது திருமணம் நடந்துள்ளதாகவும், முதல் கணவர் இறந்தவிட்ட நிலையில், இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த ஆறு வருடங்களாக ராஜலட்சுமி- நாகராஜ் தம்பதியினர் கம்மாபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதேசமயம் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நாகராஜ் அவ்வப்போது தனது மனைவியான ராஜலட்சுமி மீது சந்தேகமடைந்து, இருவருக்கும் பிரச்சினை ஏற்படுமென கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், நேற்று (25/06/2022) ராஜலட்சுமி வீட்டில் இருந்தபோது, கணவன், மனைவிக்கு இடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த நாகராஜ், வீட்டிலிருந்த கத்தியால் தனது மனைவி ராஜலட்சுமியின் கழுத்தைக் கொடூரமாக துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது மனைவி இறந்ததும் கம்மாபுரம் காவல் நிலையம் சென்று தனது மனைவியை கொன்றுவிட்டதாக சரணடைந்துள்ளார். அதன்பின்பு கம்மாபுரம் காவல்துறையினர் உடனடியாக ராஜலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

 

இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தாலும், குழந்தை பெற முடியாத சூழ்நிலையாலும் ஏற்பட்ட பிரச்சினையால் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.