Skip to main content

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வின் ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு ‘இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் தேர்வு... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வின் ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு ‘இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

hh

 

 

தேசிய அளவில் இதழியல் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பல்வேறு விருதுகளை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 

இந்த ஆண்டுக்கான ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு மூத்த பத்திரிகையாளரும், ‘இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவருமான என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

 

மேலும், கிராம இதழியல் பிரிவுக்கான விருதை போபால் ‘தேஷ்பந்து’ தலைமை நிருபர் ரூபி சர்க்கார், ரத்னகிரி ‘டெய்லி புதரி’யின் ராஜேஷ் பரசுராம் ஜோஷ்தே ஆகியோர் இணைந்து பெறுகின்றனர்.

 

‘டெவலப்மென்ட்டல் ரிப்போர்ட் டிங்’ பிரிவில், கேரள கவுமுதியின் துணை ஆசிரியர் வி.எஸ்.ராஜேஷுக்கும், புகைப்பட இதழியல் பிரிவில், டெல்லியின் ராஷ்டிரிய சகாராவைச் சேர்ந்த சுபாஷ் பாலுக்கும், டெல்லியில் உள்ள பஞ்சாப் கேசரியின் புகைப்பட இதழியலாளர் மிஹிர் சிங்குக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.

 

சிறந்த பத்திரிகை வரைகலை, கார்ட்டூன் பிரிவில் ஹைதராபாத்தின் நவ தெலங்கானா பத்திரிகை கார்ட்டூன் ஆசிரியர் பி.நரசிம்மாவுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட விளையாட்டு செய்திப் பிரிவில் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

 

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வின் ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வாகியுள்ள ‘இந்து’ என்.ராமுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘‘ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுபெரும் பத்திரிகையாளர் என்.ராமுக்கு எனது வாழ்த்துகள். இதழியல் துறைக்கு பல ஆண்டு களாக அவர் அளித்து வரும் பங் களிப்பு பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

தமிழக பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகப் பேசிவரும் தமிழக பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (25-01-2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மு.அசீப் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர், தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர்  மு. குணசேகரன் எனப் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.