Skip to main content

அடையாற்றில் தலை... காசிமேடு கடலில் இதயம்... கூவத்தில் தலையை தேடும் போலீசார்!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Heart in the sea of ​​Kasimedu ... Police search in the incident that shook!

 

ஆற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகர் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடந்த 10ஆம் தேதி மணலி செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சக்கரபாணி உடல் 6 துண்டுகளாக வீடு ஒன்றில் கைப்பற்றப்பட்டது. திருவொற்றியூர் ஏழாவது வார்டு திமுக பிரதிநிதியாக இருந்தவர் சக்கரபாணி. பைனான்ஸ் தொழில் செய்து வந்த சக்கரபாணி, கடந்த 7ஆம் தேதி திடீரென மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். சக்கரபாணியின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு அதே தெருவை சேர்ந்த தமின்பானு என்ற 22 வயது பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சக்கரபாணியின் உடல் ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தலையை மட்டும் காணவில்லை.

 

Heart in the sea of ​​Kasimedu ... Police search in the incident that shook!

 

இதுகுறித்து தமின்பானு, அவரது நண்பர் வசிம் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், பைனான்ஸ் கொடுத்த சக்கரபாணி தன்னை கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததால் என்னை தவறாக முறையில் பயன்படுத்திக்கொண்டார். அவரின் தொடர்பிலிருந்து விடுபட அவரை கொலை செய்ததாக தமின்பானு தெரிவித்தார். மேலும் வசிம் பாஷா, ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபு உதவியுடன் அவரின் தலையை அடையாற்றில் வீசியதாகவும் அதிர்ச்சி தகவலை கொடுத்தார். மேலும் அவரது இதயம், நுரையீரல், குடல் பகுதி ஆகியவற்றை கல்லில் கட்டி காசிமேடு கடலில் தூக்கி வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Heart in the sea of ​​Kasimedu ... Police search in the incident that shook!

 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக அடையாறு கூவம் ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சக்கரபாணியின் தலைபோன்ற டம்மி தலையை ஆற்றில் போட்டு நீரோட்டத்தில் அதன் நகர்வை வைத்து தேடும் பணி நடைபெற்றது. முடியாத பட்சத்தில் மீனவர்களை கொண்டு தலையைத் தேட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.