Skip to main content

அடையாற்றில் தலை... காசிமேடு கடலில் இதயம்... கூவத்தில் தலையை தேடும் போலீசார்!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Heart in the sea of ​​Kasimedu ... Police search in the incident that shook!

 

ஆற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகர் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடந்த 10ஆம் தேதி மணலி செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சக்கரபாணி உடல் 6 துண்டுகளாக வீடு ஒன்றில் கைப்பற்றப்பட்டது. திருவொற்றியூர் ஏழாவது வார்டு திமுக பிரதிநிதியாக இருந்தவர் சக்கரபாணி. பைனான்ஸ் தொழில் செய்து வந்த சக்கரபாணி, கடந்த 7ஆம் தேதி திடீரென மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். சக்கரபாணியின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு அதே தெருவை சேர்ந்த தமின்பானு என்ற 22 வயது பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சக்கரபாணியின் உடல் ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தலையை மட்டும் காணவில்லை.

 

Heart in the sea of ​​Kasimedu ... Police search in the incident that shook!

 

இதுகுறித்து தமின்பானு, அவரது நண்பர் வசிம் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், பைனான்ஸ் கொடுத்த சக்கரபாணி தன்னை கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததால் என்னை தவறாக முறையில் பயன்படுத்திக்கொண்டார். அவரின் தொடர்பிலிருந்து விடுபட அவரை கொலை செய்ததாக தமின்பானு தெரிவித்தார். மேலும் வசிம் பாஷா, ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபு உதவியுடன் அவரின் தலையை அடையாற்றில் வீசியதாகவும் அதிர்ச்சி தகவலை கொடுத்தார். மேலும் அவரது இதயம், நுரையீரல், குடல் பகுதி ஆகியவற்றை கல்லில் கட்டி காசிமேடு கடலில் தூக்கி வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Heart in the sea of ​​Kasimedu ... Police search in the incident that shook!

 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக அடையாறு கூவம் ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சக்கரபாணியின் தலைபோன்ற டம்மி தலையை ஆற்றில் போட்டு நீரோட்டத்தில் அதன் நகர்வை வைத்து தேடும் பணி நடைபெற்றது. முடியாத பட்சத்தில் மீனவர்களை கொண்டு தலையைத் தேட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.