Skip to main content

பள்ளிக் கழிப்பறையை தூய்மை செய்த தலைமை ஆசிரியர்..! 

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

The head Master who cleaned the school toilet in Nagapattinam

 

ஆதி திராவிடர் நலப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த கழிப்பறையைப் பள்ளியின் தலைமை ஆசிரியரே தூய்மை செய்த சம்பவம் நாகை மாவட்ட அரசுப் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

கரோனா பரவலின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளி வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.

 

நாகையை அடுத்துள்ள பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் நூறாண்டுகளைக் கடந்த ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளியில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததால் அப்பள்ளியில் உள்ள கழிவறைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், நோய்த் தொற்று உருவாகும் நிலையிலும் இருந்தன. தற்போது பள்ளி திறக்கப்பட்டு செயல்படத் துவங்கியிருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததால் பள்ளியின் கழிப்பறையைத் தலைமை ஆசிரியரே தூய்மை செய்திருக்கிறார். அவர் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சிகள் தற்போது ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் வெளியாகி, அவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. 

 

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ‘அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருபவர் வீரப்பன். கரோனா கட்டுப்பாடுகளால் பல மாதங்களாக மூடிக்கிடந்த பள்ளியின் பல இடங்களிலும் புதர் மண்டியும், அசுத்தமான நிலையிலும் இருந்தது. குறிப்பாக கழிப்பறைகள் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருந்தன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக, தினசரி பள்ளியின் கழிவறையை மாணவர்கள் வருவதற்கு முன்பே காலையிலேயே வந்து தலைமை ஆசிரியர் வீரப்பனே தூய்மை செய்துவருகிறார். இதனைக் கண்ட மாணவர் ஒருவர், அவருக்கே தெரியாமல் அவர் சுத்தம் செய்யும் காட்சிகளை செல்ஃபோனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்தக் காட்சிதான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.