Skip to main content

சாலையில் பள்ளம் -  கண்ணீர் அஞ்சலி போஸ்டர், ஊர்வலம் நடத்திய மக்கள்

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
b


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் பழைய வாணியம்பாடி, புதிய வாணியம்பாடி என இரண்டு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளை பிரிப்பது இரயில்பாதையும், தேசிய தங்கநாற்கர சாலையும் தான்.


பழைய வாணியம்பாடி என்கிற பகுதியில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காவல்நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், மார்க்கெட் என உள்ளது. புதிய வாணியம்பாடி பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி அலுவலகம், டி.எஸ்.பி அலுவலகம், சில தொழிற்சாலைகள் மற்றும் இரயில் நிலையமும் உள்ளது. இரண்டு புறமும் குடியிருப்பு பகுதிகளிலும் உள்ளன.


பேருந்து நிலையம் அருகில் புதிய வாணியம்பாடி பகுதிக்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த பாதை அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஏற்கனவே இருந்த பாதாள சுரங்க வழி கழிவு நீர் மற்றும் தார்சாலை போடப்படும்போதெல்லாம் உயர்த்தியதால் அந்த சுரங்க வழி மூடப்பட்டுவிட்டது. அந்த பாதையை மீண்டும் புதியதாக அமைக்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 7 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுகவும் அதுப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை.

 

gg


இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு பாதாள சுரங்க வழி ஏற்படுத்த இரயில்வே துறை நிதி ஒதுக்கியது. உடனடியாக டெண்டர் விடப்பட்டது. வேலையை தொடங்கப்போகிறோம் என பழைய – புதிய வாணியம்பாடிகளை இணைக்கும் சாலையில் ரயில்வே கேட்டின் இருபுறமும் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்தது. இதனால் மக்கள் 5 கி.மீ சுற்றிக்கொண்டு இரண்டு புறமும் சென்றுவந்தனர்.


பள்ளம் தோண்டியதோடு சரி வேலையை தொடங்கவில்லை. இதுப்பற்றி பொதுமக்கள் இரயில்வே நிர்வாகத்திடம் கேட்க அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. இந்த தொகுதியின் எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபிலிடம் முறையிட்டனர். அப்போதும் வேலையை தொடங்கவில்லை.


அந்த பள்ளம் கடந்த 2017 செப்டம்பர் 11ந்தேதி தோண்டப்பட்டு சாலையை மூடினர். தற்போது அது ஒரு வருடம் முடிந்ததையொட்டி வாணியம்பாடி இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து, முதலாமாண்டு நினைவு தினம் என போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் வாணியம்பாடி சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள், இஸ்லாமிய பெண்கள் கலந்துக்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.


அனுமதியில்லாமல் நடத்தும் கூட்டமென போலிஸார் கூட்டத்தை கலைக்க முயல, பொதுமக்கள் போராட்டம் நடத்திவிட்டே கலைந்துசென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வராக பதவியேற்க குமாரசாமிக்கு தடையா?

Published on 22/05/2018 | Edited on 22/05/2018
H. D. Kumaraswamy

 

 



கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக காங்கிரஸ் கூட்டணியோடு நாளை முதல்வர் பதவியேற்க உள்ளார் குமாரசாமி. இதற்கிடையே குமாரசாமி முதல் அமைச்சர் பதவியேற்பதற்கு தடை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. 
 

கர்நாடகாவில் உள்ள இந்து மகா சபை (ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பு) சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குமாரசாமிக்கு போதிய மெஜாரிட்டி இல்லை என்றும், இவரது கட்சியில் 38 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர் என்றும், ஆனால் பாஜகவில் 104 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர் என்றும், சட்டமன்றத்தில் பிரதான கட்சியாக உள்ள பாஜகவைத்தான் முதல் அமைச்சராக பொறுப்பேற்க அழைக்க வேண்டும். மைனாரிட்டியாக மூன்றாம் இடத்தில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை அழைத்திருப்பதும், குமாரசாமி முதல் அமைச்சராக பதவியேற்பதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகவே அ குமாரசாமியை முதல் அமைச்சராக பதவியேற்பதற்கு தடை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் இந்து மகா சபை கோரியுள்ளது. 
 

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என நாளை தெரியவரும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். 
 

இதற்கிடையே இந்த மனு ஏற்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், சட்டமன்றத்தில் இரண்டு கட்சிகளின் மெஜாரிட்டியோடு குமாரசாமி பதவியேற்பதை நீதிமன்றம் தடுக்காது. இருப்பினும் இந்த ஏற்கப்பட்டு பிறகு விசாரணையில் அது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். மனு ஏற்கப்படுவது ஒரு வகையில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் தான். காரணம், மணிப்பூர், கோவா, நாகலாந்து, பீகார் ஆகிய மாநிலங்களில் பாஜக 3ஆம் இடம் மற்றும் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. அம்மாநிலங்களில் சட்டமன்றத்தில் பிரதான கட்சி காங்கிரஸ் கட்சிதான். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த மனு ஏற்கப்பட்டால், இதையே முன்னுதாரணப்படுத்தி இந்த 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருப்பதை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாங்கள் நீதிமன்றத்திற்கு போவோம் என்கின்றனர்.