Skip to main content

கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைக்கும் அரசு.. எதிர்க்கும் விவசாயிகள்..!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

Government to set up concrete base in Keelpavani

 

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மறைந்த முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையான நீலகிரி மலையில் பெய்யும் மழை நீர் இந்த அணைக்கு வருகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாய பாசனத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் இந்த அணை நீர் பயன்படுகிறது. இந்த அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் என மூன்று வாய்க்கால் மூலம் விவசாயப் பயன்பாட்டுக்கு இந்த நீர் செல்கிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும், காலிங்கராயன் ஈரோடு மொடக்குறிச்சி பகுதியிலும், கீழ்பவானி வாய்க்கால் கோபி, பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் என பல பகுதிகளுக்கும் செல்கிறது. கீழ்பவானி வாய்க்கால் நீரால் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது. 

 

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. .கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு முன்பே அறிவித்தது. இதற்கு அப்போதே விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனாலும், சென்ற 25ஆம் தேதி வியாழக்கிழமை பிரதமர் மோடி கோவை வந்தபோது, இந்தத் திட்டத்தை அவரே தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது முழுமையாக நின்றுபோய் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், அதைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு நீர் மேலாண்மை புள்ளி விபரத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

இந்தத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சென்ற 12ஆம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும், விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி 26-2-2021 சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சித் தலைவர் ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்கச் செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களைக் கையில் ஏந்தி, கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

 

அதே போல் 27ஆம் தேதி சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், 1ஆம் தேதி திட்டம்பாளையத்திலும், 2ஆம் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் என வாய்க்கால் பகுதிகளில் தொடர் போராட்டங்களை அறிவித்து நடத்திவருகின்றனர். அரசு, ‘இத்திட்டம் மூலம் வாய்காலில் ஒடும் நீர் வெளியே கசியாமல் வாய்காலின் கடைமடையான கடைசி வரை செல்லும்’ என்று தெரிவிக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள், “இது மண்னால் கட்டப்பட்ட வாய்க்கால். இதில் நீர் செல்லும்போது இரு கரைகளிலும் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மண்ணில் நீர் சென்றால்தான் அந்த மண் நீரை தனக்குள் உறிஞ்சி சேமித்து அப்பகுதியில் நீர் இருப்பை வளம் கொடுக்கும். கான்கிரீட் அமைத்தால் நீர் கசிவு இருக்காது. இதனால் மறைமுகமாக பயன்பெற்றுவந்த இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய பூமி பாலைவனமாகும். மக்களின் குடிநீர் தேவைக்கும் பரிதாபகரமாக அலைய வேண்டிய நிலை ஏற்படும். ஓடும் நீரை, நீர் நிலைகளை அதன் போக்குக்கு இயற்கையாக விடுவதை விட்டுவிட்டு கான்கிரீட் தளம் அமைப்பது என்பது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கேடு விளைவிப்பதுதான்” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.