Skip to main content

“தேர்தல் முடிந்து ஒருமாத காலமாகியும் அரசு இதனை செய்யவில்லை” - வேதனையில் காவல் அதிகாரிகள்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

"The government has not done this for a month after the election" - Police officers in pain

 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை மற்ற மாவட்டத்திற்கும் அல்லது மாவட்டத்திற்குள் பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக தேனி மாவட்டத்தில் பணியாற்றிய சப் - இன்ஸ்பெக்டர்களைப் பணியிடமாற்றம் செய்தனர். சப் - இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளிலும் பணியிடமாற்றம் செய்தனர்.

 

இதில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தலைமை தேர்தல் அதிகாரி வாபஸ் வாங்கிய பிறகு தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் அவர்கள் பணிபுரிந்த பழைய இடத்திற்கோ அல்லது மாவட்டத்திற்குள் வேறு இடத்திற்கோ மாற்றம் செய்வார்கள். ஆனால் தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு மேலாகியும் தேர்தல் பணிக்காக சென்ற போலீசாரை இன்னும் மாற்றம் செய்யவில்லை. கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவிவந்த காரணத்தால் தேர்தல் பணிக்காக மாற்று இடத்திற்குச் சென்றவர்கள் தற்போதுவரை அதே இடத்தில் பணிபுரிந்துவருகின்றனர். இதனால் சப் - இன்ஸ்பெக்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 

அவர்களின் குடும்பங்கள் ஒரு இடத்திலும், பணி வேறு இடத்திலும் இருப்பதால் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர். மேலும், 50 வயதிற்கு மேல் உள்ள சப் - இன்ஸ்பெக்டர்கள் கரோனா காலத்தில் வீட்டிற்கும் பணிபுரியும் இடத்திற்கும் சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் அவர்களை சரிவர கவனிக்க முடியாமல் இருப்பதாகவும் போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தேர்தல் பணிக்காக மாற்றிய போலீசாரை ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கோ அல்லது புதிய இடத்திற்கோ இடமாற்றம் செய்ய வேண்டும் என்று போலீசார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.