Skip to main content

கூகுள் மேப் வைத்து ஆடுகள் திருட்டு... பொதுமக்களிடம் சிக்கிய கும்பல்!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

Goat theft with Google Map ... Gang trapped in public!

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வீடுகளில் கட்டியிருக்கும் ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளாண்விடுதி, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் சில மாதங்களில் பல ஆடுகள் திருடுபோய் உள்ளது. இதேபோல தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் சொர்ணக்காடு, மணக்காடு, சித்தாதிக்காடு உள்பட பல கிராமங்களிலும் தொடர் ஆடு திருட்டுகள் நடந்து வருகிறது. சிலர் காவல்நிலையங்களில் புகார் கொடுத்தாலும் பலர் புகார் கொடுக்கவில்லை.

 

இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரண்டு ஆடுகளை விற்க வந்த தஞ்சை மாவட்டம் சொர்ணக்காடு கிராமத்தைச் சேர்ந்த புதுக்காளியம்மன்கோயில் தெரு, கந்தசாமி என்பவரது மகன் வல்லரசு (27) மற்றும் கொலக்குடி மாந்தோப்பு, மாணிக்கம் என்பவரது மகன் ராமநாதன் (23) ஆகிய இரு ஆடு திருடர்களையும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், மணக்காட்டில் திருடிய 2 ஆடுகளையும் பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கிடை போடும் ஒருவர் தான் என்பதையும் கூறியுள்ளனர். 

 

Goat theft with Google Map ... Gang trapped in public!

 

அதேபோல இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது ஆடு உதறியதால் தவறி விழுந்த இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். ஆடு திருடர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது,  இதேபகுதியில் கிடை போட்டுள்ள ஆடுகள் வளர்ப்பவரிடம் வேலை செய்கிறோம் என்றும் எங்களைப் போல புளிச்சங்காடு கைகாட்டியில் இருவர் ஆடு திருடச் செல்வோம், ஆடுகளை திருடிக் கொண்டு செல்ல கூகுள் மேப் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். 

 

பிடிபட்டவர்களில் ஒருவன் பண்ருட்டி சண்முகசுந்தரம், மற்றொருவன் கடலூர் ரஞ்சித் என்றும் பெயர்களை கூறியுள்ளனர். ஒருவன் தனது அப்பா பிரமலமான அரசியல்வாதி வீட்டில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளான். இவர்களை நன்கு கவனித்து விசாரித்த பொதுமக்கள், பேராவூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் காத்திருந்த பிறகு காவல் நிலையத்திற்கு டிஎஸ்பி வருகிறார் திருடர்களை அழைத்துச் சென்று பிறகு அழைத்து வாருங்கள் என்று ஒரு பொறுப்பான காவல் அதிகாரிகள் அனுப்பியதால் எங்கே அழைத்துச் சென்று பாதுகாப்பது என்று தெரியாமல் ஆடு திருடர்களை மதியம் வரை ஒரு டீ க்கடையில் அமர வைத்து பொதுமக்களே. பாதுகாத்துள்ளனர்.

 

மதியத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்து அழுத்தம் கிடைத்த பிறகே பேராவூரணி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடு திருடர்கள் பேரவூரணியில் பிடிபட்ட தகவல் அறிந்தவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி பகுதியில் ஆடுகளை பறிகொடுத்தவர்கள் வேகமாக பேராவூரணி செல்லுங்கள் என்று பதிவிட்ட நிலையில் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். சிக்கியிருக்கும் ஆடு திருடர்களை சரியாக விசாரித்தால் எங்கெல்லாம் திருடினார்கள், யாரிடம் விற்றார்கள், இவர்களின் நெட்வொர்க் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு மொத்தமாக அனைவரையும் பிடிக்கலாம் என்கின்றனர் ஆடுகளை பறி கொடுத்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது