Published on 27/09/2021 | Edited on 27/09/2021

முசிறியில் சுடுகாடு அருகே காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள முட்புதரில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக முசிறி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் பார்வையிட்டபோது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர், அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எங்கேனும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.