Skip to main content

தீ வைத்து எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள் 45 நாட்களுக்கு பிறகு  நீதிமன்றத்தில்!

Published on 31/12/2018 | Edited on 01/01/2019
lo

 

தீ வைத்து எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள் 45 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியதில் கீரமங்கமலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊள்ளூர் இளைஞர்கள் சாலை போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து 2 நாட்கள் வரை அரசு அதிகாரிகளும், மீட்புக்குழுவினரும் வரவில்லை என்றும் சேதங்களின் மதிப்பை குறைத்து காட்டப்பட்டுள்ளதாகவும் வடகாடு, கொத்தமங்கலம், அணவயல், கீரமங்கலம், பனங்குளம், பெரியார் இணைப்புச் சாலை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு பகலாக மறியல் போராட்டம் நடந்தது. சாலையில் சமையல் செய்து இரவில் சாலையிலேயே தங்கினார்கள். 

 


    இந்த நிலையில் கொத்தமங்கலத்திற்கு இரவில் 5 ஜீப்புகளில் அரசு அதிகாரிகள் வந்த போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 5 ஜீப்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. சில அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த நாட்களில் போலிசார் தடியடி நடத்தி வீடு வீடாக சென்று சந்தேகத்தின்பேரில் 63 பேரை போலிசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.


    ஆனால் எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்களும் 45 நாட்களாக கொத்தமங்கலத்தில் எரிக்கப்பட்ட இடத்திலேயே கிடந்தது. இந்த நிலையில் திங்கள் கிழமை கீரமங்கலம் போலிசார் மற்றும் அதிகாரிகள் கிரேன் மூலம் ஜீப்புகளை தூக்கி டிராக்டரில் வைத்து ஆலங்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று நீதிபதியிடம் காண்பித்து மீண்டும் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு அனைத்து ஜீப்புகளையும் கொண்டு வந்தனர்.

l

 

சார்ந்த செய்திகள்

Next Story

வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து- மலைவாழ் மக்கள் 5 பேர் பலி 

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
l1


பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ள குருமலை காட்டு பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் இன்று கோட்டூர் சந்தையில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் 15 பேர் வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து  இதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் கேட்டும்  அவ்வழியாக நீண்ட நேரம் யாரும் செல்லாததால் விபத்து ஏற்பட்டது தெரியவில்லை.  பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அங்கு விரைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சன்னாசி மல்லப்பன் ராமன் மற்றும் வெள்ளையன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பலியாகினர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

 இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  குருமலை காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் வாரம் ஒருமுறை இவர்கள் 35 கிலோமீட்டர் நடைபாதையாக வந்து பின்னர் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று அதே போல் பொருட்களை வாங்கிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


 

Next Story

லாரிகள் ஸ்டிரைக் - புதுச்சேரியில் தினம் 150கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
pa

 

 மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சட்டப்பேரவை அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்,  சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

புதுச்சேரி மாநிலத்திலும் 7வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் காரணமாக புதுச்சேரியில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு ரூ. 150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரியில் 50-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட பேரணியாக வந்தனர். அப்போது சம்பா கோவில் அருகே  போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தியதால் லாரி உரிமையாளர்கள் அங்கேயே சிறிது நேரம் முற்றுகையிட்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமெழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.