Skip to main content

விவசாயியின் மனைவி அடித்து கொலை; காவல்துறை விசாரணை!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

Farmer's wife passes away near salem thalaivasal; Police investigation!

 

தலைவாசல் அருகே, கணவரை பிரிந்து தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயியின் மனைவி மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் வேப்பணம்பூண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல் (51). விவசாயி. இவருடைய முதல் மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஆகாஷ், அனீஷ் என இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர்.

 

இதையடுத்து அழகுவேலுக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் சித்ரா வசித்து வந்தார். இதற்கிடையே, கெங்கவல்லி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவரை அழகுவேல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணத்தை மறைத்து, தன்னை இரண்டாவதாக திருமணம் செய்ததை அறிந்த பெண் காவலர், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு அழகுவேலை விட்டு பிரிந்து சென்று பெற்றோருடன் வசிக்கிறார். 

 

இந்நிலையில், அழகுவேலின் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சித்ரா, மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அக். 14ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரகனூர் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்தில் சென்று விசாரணை நடத்தினர். சித்ராவின் உடலில் சில இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சித்ராவின் வீடு அருகே, தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கும் சித்ராவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும்  இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகத்தின்பேரில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். 

 

சித்ராவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், சென்ற அழைப்புகளின் விவரங்களை சேகரித்தும் விசாரணை நடந்து வருகிறது. அவரை கடைசியாக சந்தித்தவர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது மகன்கள் இருவரும் எங்கே சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது