Skip to main content

மேட்டூர் தண்ணீர் திறப்பால் சம்பா நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்..

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Farmers intensify samba paddy sowing work due to Mettur water opening ..

 

சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பாசனப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி ஆறு பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்து, அது வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீராணம் ஏரி நிரம்பியது. ஏரியின் முழு கொள்ளளவான 47.5 அடி உயரத்தை எட்டியதும், விவசாயிகளுக்குச் சம்பா நெல் நடவு பணிக்காகத் தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

இதனையொட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கடந்த 29-ந் தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்குக் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பாசனத்திற்குத் தண்ணீரை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்கள்.

 

இதனைத் தொடர்ந்து பாசன வாய்க்காலில் தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வடமூர், தெம்மூர், குமராட்சி, நாஞ்சலூர் உள்ளிட்ட சிதம்பரம், புவனகிரி பகுதியில் உள்ள டெல்டா விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்காக ட்ராக்டர் மூலம் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் நெல் விதைப்பு பணியும் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பல இடங்களில் நடவு செய்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் மழை விட்டுவிட்டுப் பெய்வதால் சம்பா பணிக்குத் தேவையான சூழல் உள்ளதாக விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.