Skip to main content

அர்ச்சகர் இல்லாத பிரசித்தி பெற்ற ஆலயம்... தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் பக்தர்கள்!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Famous temple without a priest ... Devotees making demands to the Tamil Nadu government

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது திருவட்டத்துறை கிராமம். வெள்ளாற்றின் கரையில் அழகாக அமைந்துள்ள இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு அரத்துறைநாதர், தீர்த்தபுரீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. இங்குள்ள அம்மன் திரிபுரசுந்தரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. இவ்வாலய இறைவனும், அம்பாளும் சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற ஆலயம். அப்படி பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். இந்த ஆலய இறைவனைப் பற்றி பாடுவதற்காக இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை, முத்துபல்லக்கு, முத்துக்குடை வழங்கி வரவேற்ற அதிசயம் நிறைந்த ஊர்.

 

திருவரத்துறை எனும் திருவட்டத்துறை சீர்காழியைச் சேர்ந்த சிறுவன் திருஞானசம்பந்தர் அங்குள்ள சிவன் ஆலயத்தின் குளக்கரையில் பசியால் அழுதுகொண்டிருந்தபோது பார்வதி தேவியால் ஞானப்பால் கொடுத்து அன்னையின் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர், அந்த சிறு வயதிலேயே ஊர் ஊராகச் சென்று சிவாலயங்களில் உள்ள இறைவனையும் அம்பாளையும் பற்றி பாட ஆரம்பித்தார். அப்படி பாடிக்கொண்டு வரும்போது திருவட்டத்துறை இறைவனைப் பற்றியும் பாடுவதற்காக வந்துகொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் மக்கள் நடைப்பயணம் மூலம்தான் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். அதைப்போல சிறுவன் திருஞானசம்பந்தரால் நீண்ட தூரம் நடக்க முடியாதபோது அவரது தந்தை அவரை தோளில் சுமந்து வந்தார். அப்படி திருவட்டத்துறை நோக்கி வரும்போது இறையூர் என்ற ஊர் வந்ததும் இருட்டிவிட்டது. இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடுவது என முடிவு செய்து தந்தையும் மகனும் மற்றும் அவர்களுடன் வந்த சிவனடியார்களும் இறையூரில் இரவு பொழுதை கழித்தனர்.

 

அதே இரவு திருவட்டத்துறை ஊரில் உள்ள அரத்துறைநாதர் ஆலய தர்மகர்த்தாக்கள் சிலர் கனவில் தோன்றிய இறைவன், “சீர்காழியிலிருந்து சிறுவன் திருஞானசம்பந்தன், அவனது தந்தை தோளில் சுமந்தபடி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் என்னைப் பற்றி பாட வந்துகொண்டிருக்கிறான். அவர்கள் தற்போது இறையூரில் தங்கியுள்ளனர். நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அங்கே முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவை தயாராக உள்ளன. அவைகளை எடுத்துச் சென்று உறையூரில் உள்ள திருஞானசம்பந்தரை அதில் அமரவைத்து இங்கு அழைத்துவந்து எம்மைப் பற்றி பாடச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு இறைவன் மறைந்தார். காலையில் எழுந்த தர்மகர்த்தா ஒருவர் மற்றொரு தர்மகர்த்தாவிடம் சென்று இரவில் தமது கனவில் தோன்றிய இறைவன் கூறிய விஷயத்தைப் பற்றி சொல்லியுள்ளார். அதைக் கேட்ட அந்த தர்மகர்த்தா, தானும் அதே போன்று கனவு கண்டதாக கூறியுள்ளார். இவர்களைப் போலவே மற்ற அனைத்து தர்மகர்த்தாக்கள் கனவிலும் இறைவன் தோன்றி கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.

 

Famous temple without a priest ... Devotees making demands to the Tamil Nadu government

 

இதையடுத்து அனைவரும் விரைந்து சென்று கோயில் கதவை திறந்தனர். என்னே அதிசயம், இறைவன் கனவில் கூறியது போலவே முத்துச் சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை அனைத்தும் தயாராக இருந்தன. தர்மகர்த்தாக்களும் ஊர் மக்களும் இறைவனின் மகிமையைக் கண்டு மெய் சிலிர்த்தனர். தெண்டனிட்டு இறைவனை வணங்கிவிட்டு இறைவன் கூறியபடி முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவற்றை சுமந்துகொண்டு திருஞானசம்பந்தரை அழைத்துவர இறையூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்படி செல்லும் வழியில் எதிரில் தனது தந்தையுடனும் சிவனடியார்களுடனும் திருஞானசம்பந்தர் எதிரே வந்துகொண்டிருந்தார். இப்படி இருதரப்பினரும் கூடிய இடம் தற்போது கூடலூர் என்ற ஊராக அமைந்துள்ளது. தர்மகர்த்தாக்கள் இறைவன் அளித்த முத்துச்சிவிகை, முத்துப் பல்லக்கில் திருஞானசம்பந்தரை அமரவைத்து முத்துக் குடை பிடித்தபடி திருவட்டத்துறை ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த திருஞானசம்பந்தர் இறைவன் தனக்கு அளித்த வெகுமதியை கண்டு மனம் உருகி இறைவனையும், அம்பாளையும் பற்றி பாடினார்.

 

இப்படி திருஞானசம்பந்தருக்கு வெகுமதி அளித்து அதிசயம் நிகழ்த்திக் காட்டிய இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய தற்போது அர்ச்சகர்கள் இல்லை. ஏற்கனவே இங்கு அர்ச்சகராக பணி செய்துவந்தவர் சாமிநாத குருக்கள். இவர் நீண்டகாலம் இவ்வாலய இறைவனுக்கும், அம்பாளுக்கும் இறை பக்தியுடன் பணி செய்துவந்தார். வயது மூப்பின் காரணமாக ஓராண்டுக்கு முன்பு அவர் இயற்கை எய்தினார். அதன்பிறகு இவ்வாலயத்திற்கு நிரந்தரமான அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத்திற்கு அதன் அதிகாரிகள் நிரந்தரமான அர்ச்சகர் ஒருவரை நியமிக்காமல் அலட்சியமாக உள்ளனர். தினசரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனையும் அம்பாளையும் வழிபட வரும் பக்தர்கள் பூஜை செய்ய அபிஷேகம் செய்ய அர்ச்சகர் இல்லாமல் தவிக்கிறார்கள், அல்லாடுகிறார்கள். எனவே நிரந்தரமான ஒரு அர்ச்சகரை பணியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களும், ஊர் மக்களும் கடந்த ஓராண்டாக வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.