Skip to main content

ரம்பத்தால் அறுத்து குடும்பமே தற்கொலை... நீடிக்கும் மர்மத்தால் பொழிச்சலூரில் பதற்றம்!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

சென்னை அருகே பொழிச்சலூரில் ஐ.டி நிறுவன ஊழியர் மனைவி, இரு குழந்தைகளை எலெக்ட்ரிக் ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி பாஜகவின் பொழிச்சலூர் மண்டல மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மே 27 ஆம் தேதி பிரகாஷ்- காயத்ரி தம்பதியினருக்கு திருமணநாள் என்பதால் காயத்திரியின் தந்தை திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாதத்தைத் தனது மகளுக்கு கொடுக்க வீட்டுக்கு சென்றுள்ளார். வீடு உள்பக்கமாக தாழிப்பட்டிருந்த நிலையில் உள்ளே ஏதோ மெஷின் இயங்கும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் அச்சமடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகள் காயத்ரி, மருமகன் பிரகாஷ், பேரக்குழந்தைகள் ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ ஆகிய நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பிரகாஷ் கையில் எலெக்ட்ரிக் ரம்பம் ஒன்று இயங்கி கொண்டிருந்த நிலையில் கிடந்தது. அந்த சத்தம்தான் வெளியே கேட்டுள்ளது.

 

இந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அமேசான் எனும் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் ரம்பத்தை ஆர்டர் செய்த பிரகாஷ் இந்த கொலை செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கொலை நிகழ்ந்த வீட்டிற்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கடன் தொல்லையால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எங்களின் முடிவுக்கு யாரும் காரணமல்ல என்ற கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம். மனைவி குழந்தைகளை பேட்டரியால் இயங்கக்கூடிய ரம்பத்தால் அறுத்து கொலை செய்துவிட்டு வலது கையால் ரம்பத்தை இயக்கி தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரகாஷ் என காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

 

பிரகாஷ் வீட்டுக்கு அருகிலேயே நாட்டு மருந்து கடை ஒன்றை வைத்திருந்ததாகவும், கரோனா காலத்தில் நன்றாக வருமானம் வந்த கடை தற்பொழுது இழப்பில் கொண்டுபோய் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் அவர் ஆரம்பித்த நெய் விற்பனை கடையும் இழப்பில் சென்றதால் குடும்பம் கடனில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் இருக்கும் மனைவியும் பல்வேறு தரப்புகளில் உதவியை நாடிய போதிலும் கடனை அடைக்க முடியாத சூழல் இருந்ததாக கூறப்படுகிறது. 3 லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரத்தை போலீசார் வீட்டில் கண்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் தற்கொலை என்றாலும் ஆன்லைனில் ரம்பத்தை வாங்கி கொடூர முறையில் தற்கொலை செய்ய என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர தற்கொலை சம்பவம் பொழிச்சலூரில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.