Skip to main content

முன்னாள் பதிவாளர் தற்கொலை: மாஜி துணைவேந்தர் உள்பட 15 பேருக்கு சம்மன்!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கில் மறுவிசாரணையை தொடங்கியுள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் துணைவேந்தர், அங்கமுத்துவின் உறவினர்கள் உள்பட 15 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.

 


ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் அங்கமுத்து. சேலம் பெரியார் பல்கலையில் 2012&2015 காலக்கட்டத்தில் பதிவாளராக பணியாற்றி வந்தார். அவர், 18.12.2017ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பல்கலையில் செல்வாக்கு மிக்க பதவியில் இருந்த அங்கமுத்து, பதிவாளர் பதவிக்காலம் முடிந்த பிறகு தனது முந்தைய பணியான உடற்கல்வி இயக்குநர் பணிக்குச் சென்றுவிட்டார். 

 

 Ex-registrar suicide: 15 people including Majhi Vice-Chancellor

 

இப்படிப்பட்டச் சூழலில்தான் அவருடைய திடீர் தற்கொலை முடிவு, பல்கலை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து அவருடைய வீட்டில் இருந்து அங்கமுத்து எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தை பெருந்துறை போலீசார் கைப்பற்றினர்.

 


ஏழு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், 2014 & 2017 வரை பெரியார் பல்கலையில் துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்களை 25 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமித்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். 

 


சுவாமிநாதனுக்கு தான் மட்டுமே அவ்வாறு 10 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்ததாகவும், அதன்பிறகு பல்கலையில் நடந்த பல்வேறு ஊழல்களில் தன்னை மட்டுமே சுவாமிநாதன் சிக்க வைக்க முயன்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

 


தனது தற்கொலைக்கு சுவாமிநாதன், இயற்பியல் துறை பேராசிரியர் 'மூளை' கிருஷ்ணகுமார், அப்போதைய பதிவாளர் மணிவண்ணன், அலுவலக ஊழியர்கள் நெல்சன், குழந்தைவேல், ராஜமாணிக்கம், ஸ்ரீதர் ஆகிய ஏழு பேரும்தான் முக்கிய காரணம் என்று தெளிவாக எழுதியிருந்தார். 

 

 Ex-registrar suicide: 15 people including Majhi Vice-Chancellor


அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்து, அங்கமுத்துவினுடையதுதான் என்று சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகமும் உறுதிப்படுத்தியது. இதற்கிடையே, பெரியார் பல்கலையில் இருந்த முக்கிய கோப்புகளை அங்கமுத்து ஒப்படைக்காமல் சென்றுவிட்டதாக கடந்த ஆண்டு சூரமங்கலம் போலீசில் பதிவாளர் மணிவண்ணன் ஒரு புகார் அளித்து இருந்தார்.

 


அங்கமுத்து மீது ஏற்கனவே ஒரு வழக்கு சேலம் மாநகர காவல்துறையில் உள்ள நிலையில், அவருடைய தற்கொலை வழக்கையும் சேலம் மாநகர காவல்துறைக்கு மாற்றும்படி ஏடிஜிபிக்கு பரிந்துரை செய்தது பெருந்துறை போலீஸ். அதன்பிறகு, இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவின் ஓர் அங்கமான கொடுங்குற்றப்பிரிவு வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

 

 Ex-registrar suicide: 15 people including Majhi Vice-Chancellor


இதையடுத்து அங்கமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் தற்கொலை குறிப்பு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மேற்சொன்ன ஏழு பேர் மீதும் புதிதாக கொடுங்குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ் வழக்குப்பதிவு செய்தார். 

 


இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அங்கமுத்துவின் மனைவி விஜயலட்சுமி உள்பட அவர் தரப்பில் 8 பேர் மீதும், பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதன், பேராசிரியர் 'மூளை' கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீதும் என மொத்தம் 15 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

 Ex-registrar suicide: 15 people including Majhi Vice-Chancellor

 

முதல்கட்டமாக கடந்த 3.12.2018ம் தேதியன்று பெரியார் பல்கலை அலுவலக ஊழியர் நெல்சன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். ராஜமாணிக்கத்தை விசாரணைக்கு அழைத்தபோது அவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்ற ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

 


மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் தீவிரம் காட்டி வருவதால் முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதன் உள்ளிட்ட வட்டாரங்கள் பீதி அடைந்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.