Skip to main content

மாமனாரிடம் சொத்துக்களை தானம் வாங்கிய முன்னாள் அமைச்சர்!

Published on 16/09/2021 | Edited on 17/09/2021

 

Ex-minister donates property to father-in-law

 

முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.சி.வீரமணியின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள், பினாமிகளின் வீடுகள் என சுமார் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் அவரது மாமனார் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த குருவிமலை என்கிற கிராமத்தில் உள்ள பணக்காரர் பழனி. பண்ணையார் பழனி என்பார்கள் இந்த வட்டாரத்தில்.  இவரது மகளைத் தான் கே.சி.வீரமணி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

2012- ஆம் ஆண்டு அமைச்சரானபோது ஊழல் பணத்தைத் தனது மாமனாரிடம் தந்து நிலங்களாக வாங்கிப் போட்டார். தனது மாமனாரான பழனி மீது கே.சி.வீரமணிக்கு மரியாதை இருந்தாலும் குடும்பப் பிரச்சனையால் மாமனாரை பின்பு நம்புவதில்லை. இதனால் மாமனார் பெயரில் வாங்கிய சுமார் 200 ஏக்கர் நிலங்களை தன் பெயருக்கு மாற்றத் துவங்கினார் கே.சி.வீரமணி. அதில் சில சொத்துக்கள் வாங்கிய சில மாதங்களிலேயே கைமாறியுள்ளது.

 

மாமனாரிடமிருந்து நிலங்களை தன் பெயருக்கு மாற்றினால் செட்டில்மென்ட் கணக்கில் பத்திரப் பதிவு செய்தால் வருமானம் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி வரும் என்பதால், மாமனார் மருமகனுக்கு தானம் தருவதுபோல் பத்திரப்பதிவு செய்துள்ளார். அவரது சின்ன மாமானர் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு சென்ற போளூர் கார்த்திகேயன் பெயரிலும் சொத்துக்களை வாங்கினார். இந்த கார்த்திகேயன் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாப்பிள்ளையின் சிபாரிசில் போளூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்.எல்.ஏ. சீட் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல் தனது தாயார், சகோதரிகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி பின்பு, அதனை அவர்கள் மகனுக்கு, சகோதரனுக்கு தானம் தருவது போல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.