Skip to main content

மலை மக்களின் வரவேற்பை பெற்ற ஈரோடு எஸ்.பி!

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

Erode SP welcomes hill people

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்த பர்கூர் மலை பகுதி உட்பட்ட கத்திரி மலை கிராமத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகைகள் மலை கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு முகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் நலஉதவி வழங்கும் விழா 31ந் தேதி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார்.

 

பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சென்னம்பட்டி வனசரகர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மாவோயிஸ்ட் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ,சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 

மாவட்ட எஸ்.பி.சசிமோகன் மலைவாழ் மக்களுக்களிடம் பேசுகையில், சட்டவிரோத செயல்கள், ஆதார் அட்டையின் முக்கியத்துவம், நமது பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு, மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, அரசின் சார்பாக அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவித்தொகைகள், கரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி போடுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், மலைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும்  போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் கத்திரி மலையைச் சேர்ந்த 90 மலை குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், சோப்பு பவுடர், பிளாஸ்டிக் குடம், வெள்ளை வேட்டி, போர்வை, துண்டு ,தலையணை, சில்வர் தட்டு, பாய், 30 பள்ளி குழந்தைகளுக்கு தலா ஒரு டிபன் பாக்ஸ், எழுது பொருட்கள் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு சோலார் விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.

 

தொடர்ந்து மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நேரில் மலை பகுதிக்கு சென்று மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக நல உதவிகள், விழிப்புணர்வு போன்ற உதவும் செயல்களை ஈரோடு எஸ்.பி. சசிமோகன் செய்து வருவது  ஆதிவாசி, மலைவாழ் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.