Skip to main content

நள்ளிரவில் சினிமா பாணியில் பிரபல கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்தது போலீல்

Published on 23/11/2018 | Edited on 19/12/2018
sc


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு காரில்  80 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் மணிகண்டன் என்பவனை  பெருந்துறை போலீசார் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர்.  அவனது காரில் இருந்த வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

வேலூர் மாவட்டம், காட்பாடி, கே.வி குப்பம் பகுதியை சார்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (41). இவன் மீது வேலூர், வாலாஜாபாத், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாமக்கல், தர்மபுரி, கோவை வடவள்ளி, துடியலூர், காட்டூர், பொள்ளாச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 குண்டாஸ் உட்பட 80 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இவனை பிடித்த  காஞ்சிபுரம் போலீசார் இவனிடமிருந்து ஒரு கிலோ நகை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.

 

sc

 

கடந்த நவ.3 ம் தேதி வெளியே வந்த மணிகண்டன் அதன் பிறகு ஆறு இடங்களில் இரண்டு கிலோவிற்கு மேல்  தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளான். இவனை பிடிக்க போத்தனூர் குற்ற பிரிவு உதவி ஆணையர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.  இந்நிலையில் இவனது கூட்டாளி ஒருவனை நகை விற்க கொண்டு செல்லும்போது தனிப்படை போலீசார் மடக்கி கைது செய்தனர்.  அவன் கைதான தகவல் தெரியாமல் அவனது செல்போனுக்கு  மணிகண்டன் தொடர்புகொண்டதால் மணிகண்டனின் மொபைல் எண்ணை வைத்து தேடி வந்தனர்.  நேற்று முன் தினம் திண்டுக்கல்லில் ஒரு வீட்டில் திருடிவிட்டு அப்படியே ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டான். பின் நேற்று அங்கிருந்து கேரளாவிற்கு சென்றான். பிறகு அங்கிருந்து சேலம் செல்ல கோவை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளான்.

 

 

நேற்று நள்ளிரவு இத்தகவல் பெருந்துறை போலீசாருக்கு கிடைத்ததால் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தனர். இரவு சுமார் 1;30 மணியளவில் பெருந்துறை சிப்காட் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் நிரப்பியபோது    சினிமா பாணியில்  போலீசார் சுற்றி வளைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார் முன்னிலையில் கார் சோதனையிடப்பட்டது.

 

sc

 

காரின் டிக்கியில் வீட்டின் பூட்டை உடைக்க 10 க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகள், 8 செல்போன், வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஏராளமாக இருந்தது கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.  சேலத்தில் உள்ள வக்கீல்  ஒருவரிடம் 10 லட்ச ரூபாய் கொடுத்து காரை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளை ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிப்பது தான்  வாடிக்கை.   இவனை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சோமசுந்தரத்திடம் காருடன் பெருந்துறை காவல்துறையினர் ஒப்படைத்தனர். இவனது கூட்டாளியிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் தற்போது பிடிபட்ட நகைகளை மதிப்பீடு செய்யும் பணி முடியாததால் மொத்த மதிப்பு குறித்து கோவை மன்டல  ஐ. ஜி மூலம் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.