Skip to main content

தேர்தல் நாளில் காவல்துறையினருக்கு ‘அவசர’ உத்தரவு! - வி.எச்.எஃப். செட் ஒப்படைப்பில் வில்லங்கமா?

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

hjk

 

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலில் இத்தனை அவசரகதியிலா காவல்துறையினர் செயல்படவேண்டும்? வேறுவழியின்றி, , நாளை (6-ஆம் தேதி)  வாக்குப்பதிவு முடிந்ததும், காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டது போல், தங்களுக்கு இட்ட கட்டளையை அரக்கப்பரக்க நிறைவேற்றப் போகின்றனர். 


இதென்ன விவகாரம்? வாக்குப்பதிவு நாளில், வி.எச்.எப். (very high frequency) தொலைத்தொடர்பு உபகரணங்களான வாக்கி-டாக்கி, வாகனங்களின் பொருத்தப்பட்டுள்ள மைக் போன்றவற்றை, பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்துவது வழக்கம். இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆந்திரா – ஒருங்கிணைந்த போலீஸ் வயர்லெஸ் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்டு, தமிழகத்தில் பல அலகுகளுக்கும் அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையம், மண்டல் மற்றும் ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை, ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்துவதாக அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில டி.ஜி.பி., தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தொலைத்தொடர்பு சாதனங்களை அதே நல்ல நிலையிலேயே, காலதாமதம் செய்யாமல், உடனே சென்னை PTB சர்வீஸ் பிரிவுக்கு அனுப்பவேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கு ‘ரேடியோ மெசேஜ்‘ வாயிலாக தகவல் அனுப்பினார். 


தமிழக காவல்துறை ஏடிஜிபியும், அத்தகவலை அப்படியே ஏற்று, விரைந்து செயல்பட வேண்டுமென, தென்மண்டல காவல்துறை அதிகாரிகள் வரைக்கும் ‘ரேடியோ மெசேஜ்’ அனுப்பினார். மத்திய மற்றும் தெற்கு மண்டல ஏடிஎஸ்பி (Tech) ரமேஷ், காவல்துறையினருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பிய வாய்ஸ்-மெசேஜில் – “அசெம்பிளி எலக்ஷனுக்காக நாம வாங்கிய சர்வீஸ் செட் எல்லாத்தயும் ஆந்திரா – தெலங்கானாவுக்கு திருப்பிக் கொடுக்கணும். இந்த செட்டை எல்லாம் பக்கத்துலயே கொடுத்து வச்சிக்கங்க. ரொம்ப லாங் டிஸ்டன்ஸ்ல கொடுக்க வேணாம். அப்புறம் கழற்ற முடியாது. போலிங் 7 மணிக்கு முடிஞ்சிருச்சுன்னா.. 8 மணிக்கு கழற்ற ஆரம்பிச்சிருங்க. எஸ்.பி.கிட்ட எமர்ஜெனிஸின்னு காமிச்சிட்டு, நைட்டோட நைட்டா ஆள போட்டு மதுரைக்கு கொண்டு வந்திருங்க. நாங்க வண்டிய வச்சிக்கிட்டு ரெடியா உட்கார்ந்து இருப்போம். எனக்கு ஏழாம் தேதி காலைல 6 மணிக்கு போகணும்னு சொல்லிருக்காங்க. அது உங்க கையிலதான் இருக்கு. நானும் இங்க வண்டி வாங்கி ஆள் போட்டு அனுப்பி விடணும். இத கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கங்க. அதிகபட்ச அட்டென்ஷன் கொடுங்க. இல்லைன்னா.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பார்த்து நடந்துக்கங்க.” என்று பேசியிருக்கிறார். 


 

hjk

 

இந்த  ‘அவசரம்’ குறித்து நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர் “எல்லாமே சம்பிரதாயமா நடந்துக்கிட்டிருக்கு. 7 மணிக்கு போலிங் முடிஞ்சதும் 8 மணிக்கு வி.எச்.எப். செட்டை அனுப்பனும்னு சொல்லுறாங்க. மாவட்ட / நகர தலைமையகத்துக்கு பக்கத்திலேயே செட்டை பயன்படுத்தணும். நீண்ட தூர ரோந்து மற்றும் மொபைல் பார்ட்டி வாகனங்களுக்கு கொடுக்க வேணாம்னு ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டிருக்காங்க. ஒரு ஊருல இருக்கிற வாக்குச்சாவடிக்கும், இன்னொரு ஊருல இருக்கிற கவுண்டிங் சென்டருக்கும் இடைப்பட்ட தூரம் நெறய இருக்கும். காவல்துறை டிஜிபி சொல்லுறத அப்படியே கடைப்பிடித்தால், கவுண்டிங் சென்டர் வரைக்கும் வி.எச்.எப். சாதனங்களைக் கொண்டுசெல்ல முடியாது. வாக்குப்பதிவு நடந்த இடத்திலேயே செட்டை அகற்றனும்கிற மாதிரி இருக்கு இந்த உத்தரவு. நடக்கக்கூடாத ஏதாச்சும் ஒண்ணு நடந்தாக்கூட, வெளிப்படையா வி.எச்.எப். மூலம் தகவல் பறிமாறிக்கொள்ள முடியாது. கொடுத்தது கொடுத்தபடியே நல்ல நிலையில் வி.எச்.எப். செட் இருக்கணும்னு கண்டிஷன் வேற. அப்படின்னா.. செட்ட யூஸ் பண்ணாம அப்படியே திருப்பிக் கொடுத்திருங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு. சும்மாவே, இவிஎம் மெஷின் குறித்து மக்களுக்கு சந்தேகம் இருக்கு. இந்த மாதிரி நடக்கும்போது, போலீஸை வச்சே ஓட்டு மெஷினை மாற்ற திட்டம் எதுவும் இருக்கோன்னு, மக்கள் பேசுறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திட்டாங்க.” என்றார் வேதனையுடன்.

 

திட்டமிடல் இல்லாமல் இத்தனை பலவீனமாகவா இருக்கிறது தேர்தல் ஆணையம்? 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.