Skip to main content

''விரும்பும்போதெல்லாம் நடத்தமுடியாது''-அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

'' Elections cannot be held whenever they want '' - Minister Periyakaruppan interview!

 

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இந்த தேர்தல் முன்னரே நடக்க வேண்டியது. ஆனால் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் தோல்வி பயத்தில் திமுக வழக்கைத் தொடுத்துத் தேர்தலை நிறுத்தியது. சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டதோடு இதுவும் போதாதென்று மேலும் 20 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். மொத்தமாக 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். எவ்வளவு செஞ்சிருக்கீங்க. நான்கு மாதம் முடிந்து ஐந்தாவது மாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டோ... மூன்றோ... அறிவிப்புகளைச் சம்பிரதாயத்திற்கு அறிவித்துவிட்டு விட்டுட்டாங்க. ஆனால் அறிவிக்கப்பட்ட எந்த அறிவிப்புமே நிறைவேற்றப்படவில்லை.''என்றார்.

 

'' Elections cannot be held whenever they want '' - Minister Periyakaruppan interview!

 

எதிர்க்கட்சி தலைவரின் இந்த விமர்சனத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாகப் பதிலளித்திருந்தார். அதேபோல் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, ''எடப்பாடி பழனிசாமி அவதூறுகள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவரே அவரை தாழ்த்திக் கொண்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதை அவராகப் பார்த்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு'' எனக் கூறியிருந்தார்.

 

'' Elections cannot be held whenever they want '' - Minister Periyakaruppan interview!

 

இந்நிலையில் தற்பொழுது சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ''விரும்பும்போதெல்லாம் தேர்தலை நடத்த முடியாது. வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகளை முடித்தால் தான் தேர்தலை நடத்தமுடியும். உள்ளாட்சி என்பது ஒரு மரத்தின் வேர் போன்றது. அந்த வேர்களைச் சிதைத்தது அதிமுகதான். தோல்வி பயத்தினால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் அதிமுக அரசு பார்த்துக்கொண்டது''என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.