Skip to main content

மலைவாழ் மக்களின் கனவு நனவாகிறது!!- விடியுமா அவர்களின் வாழ்க்கை!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது மேல்வலசை, கீழ்வலசை, அக்கரைப்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில், கீழ்வலசை கிராமத்தில் 358 மலைவாழ் மக்களும், மேல்வலசை கிராமத்தில் 198 மலைவாழ் மக்களும், அக்கரப்பட்டு கிராமத்தில் 190 மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த மலைவாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயம்.

LIFE


இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி இதுவரை கிடையாது, மின்சார வசதி கிடையாது, நியாயவிலைக்கடை கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது, ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது, குடிதண்ணீர் வசதி கிடையாது இப்படி பல கிடையாதுகள், இதில் எது வேண்டும்மென்றாலும் சுமார் 10 கி.மீ தூரம் மலையில் இருந்து கீழே இறங்கிவர வேண்டும் என்பதால் அக்கிராம மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்மென பல ஆண்டுகளாக மனுக்களுக்கு மேல் மனுக்களை அளித்துவந்தனர்.


இதுப்பற்றி, 4 ஆண்டுக்கு முன் நக்கீரன் இதழில் 3 பக்க செய்திக்கட்டுரை வந்தது. அந்த செய்தி வந்த 3வது நாளே மாவட்ட ஆட்சியராக இருந்த விஜய்பிங்ளே, அந்த கிராமத்துக்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் நேரடியாக விசிட் அடித்து மலையில் 15 கி.மீ தூரம் நடந்து பாதை அமைக்கும் வழியை பார்வையிட்டார். மின்வசதிக்கு ஏற்பாடு செய்துதர உத்தரவிட்டார். அதன்பின் ஆட்சியராக வந்த பிரசாந்த்வடநேரே போன்றவர்கள் பல முயற்சிகளை ஏற்படுத்தி மின்வசதி செய்து தந்தனர்.

LIFE


ஜீலை 13ந்தேதி, உள்செக்கடி கிராமத்திலிருந்து பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கீழ்வலசை கிராமத்திற்கு 6 கி.மீ. மலைப் பாதையில் நடை பயணம் மேற்கொண்டு, சாலை வசதி ஏற்படுத்துவற்கான  ஆய்வு மேற்கொண்டார் கலெக்டர் கந்தசாமி. உள்செக்கடி கிராமத்தில் மூன்று மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கீழ்வலசை கிராமத்திற்கு அழைத்து சென்றார்கள். மாவட்ட ஆட்சியருடன் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவத் துறை, மகளிர் திட்டம், ஆகிய துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நடை பயணம் மேற்கொண்டார்கள்.

 

LIFE


உள்செக்கடி முதல் கீழ்வலசை வரை உள்ள மலைப் பாதையில் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்டமாக வருவாய்த்துறை இடமான 1 கி.மீ. தொலைவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக சாலை அமைப்பதற்கு ரூ.29.00 இலட்சம் நிர்வாக அனுமதி வழங்கி, முதற் கட்டப்பணிகளும் இன்று கீழ்வலசை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப் பாதையில் 4.6 கி.மீ. வனத்துறை இடத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது, அனுமதி வழங்கப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இந்த சாலை அமைக்கப்படுவதால், தற்போது 90 கி.மீ. சுற்றி வாகனங்களில் செல்வதற்கு பதிலாக, 25 கி.மீ. பயணம் மேற்கொண்டால் அருகில் உள்ள முக்கிய நகரமான தானிப்பாடிக்கு வந்து சேரலாம். இதன் மூலம் மலைவாழ் மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வியாபாரம் செல்வதற்கும், தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கீழ்வலசை முதல் மேல்வலசை வரை 662 மீட்டர் தூரமும், கீழ்வலசை முதல் அக்கரப்பட்டு வரை 2.5 கி.மீ. தூரமும் வருவாய்த் துறை இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றம் ஊராட்சித் துறை மூலமாக புதிய சாலை அமைப்பதற்கு திட்டம் தயாரிக்க கூறியுள்ளார், விரைவில் அறிக்கை கிடைத்தவுடன் அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

 

 


ஆய்வின்போது மலைவாழ் மக்கள் கிணறு மற்றும் மேல்நிலை நீர் தொட்டிகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக கிணற்றினை ஆழப்படுத்தியும், பலப்படுத்தியும், மேல்நிலை நீர் தொட்டிகளை சீரமைத்தும் மலை கிராமங்களுக்கு சீராக தண்ணீர் வழங்க உத்திரவிட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் கீழ்வலசை கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலையம், மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார். மேலும், கீழ்வலசை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பழங்கடியினர் நல ஆரம்பப் பள்ளி வளாகத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கும் திட்டம் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். மேற்கண்ட கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து ஆரம்பிக்கவும் உத்திரவிட்டார்.

 

LIFE

 

 

 

இதனை தொடர்ந்து கீழ்வலசை மற்றும் மேல்வலசை கிராமங்களில் அரசு பழங்குடியினர் நல ஆரம்பப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சிகிச்சை மேற்கொண்டார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் தற்போது மாதம் ஒருமுறை நடைபெற்று வரும் சிறப்பு முகாம், இனி மேல் ஒவ்வொரு வாரமும் புகன்கிழமைகளில் நடைபெறும் என தெரிவித்தார்.


மகளிர் திட்டம் மூலமாக மூன்று கிராமங்களை சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து முதல் முறையாக கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு கிராமங்களை உள்ளடக்கி ஒரு குழுவிற்கு 12 பெண்கள் வீதம் இரண்டு மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டது. மேலும், மகளிர் திட்டம் மூலம் மலை கிராமங்களைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான இலவச பயிற்சி சென்னையில் அளிப்பதற்கும், 3 ஆண்களுக்கு பணிபுரிவதற்கு தேவையான இலவச பயிற்சி அளிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் பசுமை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகளை தேர்வு செய்து மலைவாழ் மக்கள் புதிய வீடு கட்டுவதற்கான ஏதுவாக பணி ஆணைகளை விரைந்து வழங்குமாறு ஊரக வளர்ச்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

 

 


மாவட்ட ஆட்சியர் 3 பார்வையற்ற பழங்குடியின மலைவாழ் மாற்றுத்திறனாளிகள் சுமதி, கிருஷ்ணவேணி, விஜயகுமார் ஆகியோருக்கு மாதம் ரூ.1000- உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், கீழ்வலசை கிராமத்தை சேர்ந்த சோபன், சாமிக்கண்ணு தம்பதியினரின் மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாற்றுத்தினாளி மகன் வினோத் என்பவருக்கு பராமரிப்பு செலவிற்கு மாதம் ரூ.1500- உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணையும், மூன்று சக்கர நாற்காலியும் வழங்கினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிசினஸ்மேன் டூ அரசியல்வாதி; கலைஞர் சொன்ன அந்த வார்த்தை...” - யார் இந்த அண்ணாதுரை?

Published on 08/04/2024 | Edited on 09/04/2024
Activities of Tiruvannamalai DMK candidate Annadurai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகத்தின் 39 தொகுதியிலும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆன்மீக திருத்தலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சி.என். அண்ணாதுரை இரண்டாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுவின் இளைய மகன் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் கு.கருணாநிதிக்கு தலைமை சீட் வழங்கும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் சி.என். அண்ணாதுரை மீது தலைமை நம்பிக்கை வைத்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை அந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆனால், மத்தியில் ஆளும் அரசு எதிர்க்கட்சி பாஜகவாக இருப்பதால், அவரால் தொகுதி திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் எம்பியின் ஆதரவாளர்கள்.

51 வயதான சி.என். அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சி.என். அண்ணாதுரையின் தாத்தா சின்னசாமி பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். அவரைத் தொடர்ந்த சி.என். அண்ணாதுரையின் அப்பா நடராஜனும் திமுக கட்சியில் அப்போதே ஒன்றியச் செயலாளராக கழக பணியில்  ஈடுபட்டவர். இப்படி இரண்டு தலைமுறையாக பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்ட குடும்பம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மகனுக்கும்  பேரறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டியது. சி.என். அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கட்டுமானத் துறையில் நுழைந்த அண்ணாதுரை முழு நேர பிசினஸ்மேனாக மாறினார். இதனிடையே,  மூன்றாவது தலைமுறையாக திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை கிளைச் செயலாளர்,  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என படிப்படியாக திமுக கட்சியில் வளர்ந்தவர்.  

தொடர்ந்து, பாரம்பரியமாக திமுக கட்சியில் தீவிரமாக கழகப் பணிகளை செய்து வந்த சி.என். அண்ணாதுரையை திமுக அமைச்சர் எ.வ.வேலு இளம் வயதிலேயே அடையாளம் கண்டார். அதனைத் தொடர்ந்து, எ.வ.வேலுவின் அரவணைப்பில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த சி.என். அண்ணாதுரைக்கு திமுக கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது. ஆனால், அந்த முறை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். முன்னதாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் சி.என். அண்ணாதுரைக்கு முதல் முறை சீட் வழங்கிய போது, ''என் அண்ணன் பெயரைக்கொண்ட இந்த சி.என்.அண்ணாதுரைக்கே சீட்..’' என குறிப்பிட்டு வழங்கியதாக அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன்  கூறுகின்றனர். இதையடுத்து, மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அரசியல் குரு எ.வ.வேலுவின் மூலம் சீட் சி.என். அண்ணாதுரைக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை  சி.என். அண்ணாதுரை வாகை சூடினார். 

அதனைத் தொடர்ந்து, நாடளுமன்றம் அவைக்குச் சென்ற சி.என். அண்ணாதுரை தொடர்ந்து தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அதன் மூலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கச் செய்தார். திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டத்துக்காகப் போராடி, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனால், எம்பி திட்டம் தொகுதிக்கு கொண்டு வந்தும் நிதி மத்திய அரசு ரிலீஸ் செய்யவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.  அதுமட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை, புதூர்நாடு மலைக் கிராமங்களில் 33 டவர்களை நிறுவுவதற்கான பணிகளை தனது தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் சி.என். அண்ணாதுரை அழுத்தம் கொடுத்து செய்து கொடுத்துள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு காத்திருக்காமல் சி.என். அண்ணாதுரை தனது சொந்த செலவில் பர்வதமலைக்கு 40 சோலார் விளக்குகளை அமைத்துள்ளார். 

கடந்த முறை மத்தியில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த காரணத்தால் திருவண்ணாமலை தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு  அளித்தால் மேலும், சி.என். அண்ணாதுரை சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மீண்டும் வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் இந்த முறையும் அவரை வெற்றி பெற வைக்க தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.