MK

1905-ல் நிறுவப்பட்ட ரோட்டரி இன்டர்நேஷனல், 45,000 கிளப்புகள் மற்றும் 1.3 மில்லியன் உறுப்பினர்களுடன் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ரோட்டரி சமூகம் முழுவதும் அற்புதமான சேவையைச் செய்து வருகிறது. ஏழைகளுக்கு உதவவும், போலியோவை ஒழிப்பதில் அரசுடன் இணைந்து கருவியாகவும் உள்ளது.

Advertisment

ரோட்டரி மாவட்டம் 3,232, சென்னை மாநகரில் 170 கிளப்கள் மற்றும் 8,250 உறுப்பினர்களைக் கொண்டு சமூகத்திற்கு அளப்பரிய சேவை செய்து வருகிறது. ரோட்டரி 2021-22 ஆம் ஆண்டில் ரோட்டரி பல திட்டங்களைச் செய்துள்ளது மற்றும் 2021-22 ஆண்டில் 150 டயாலிசிஸ் மையத்தை அமைத்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஜூன் 30, 2022 அன்று ஹோட்டல் ஃபெதர்ஸில்(Hotel Feathers)-ல் நடந்த விழாவில்(ஜூலை 1-2022)அன்று ரோட்டரி மாவட்டம் 3,232-ன் மாவட்ட ஆளுநராக டாக்டர் நந்தகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டாக்டர் நந்தகுமார் ஒரு மூத்த பல் மற்றும் மாக்சியோஃபேஷியல்(Dental and Maxiofacial surgeon) அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். ரோட்டரியில் கடந்த 21 ஆண்டுகளாக பல தலைமைப் பதவிகளில் பணியாற்றிய அவர், கடந்த பத்து வருடங்களில் அனைத்து சுகாதார முன்முயற்சிகளிலும் முன்னணியில் இருந்து பல பெரியத்திட்டங்களை செய்துள்ளார்.

Advertisment

கோவிட் தொற்றுபோது ரோட்டரி களத்தில் இருந்தது. டாக்டர் நந்தகுமார் மருத்துவர் குழுவை உருவாக்கி மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தது, ஆக்ஸிஜன் தேவைப்படும் கோவிட் நோயாளிகளுக்கான அழைப்பு மையத்தை தொடங்கி சேவைகளை செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது.