Skip to main content

வரதட்சணை கொடுமை.... கணவர் வீட்டின் முன் அழுது புரண்ட பெண் வழக்கறிஞர்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Dowry cruelty .... Female lawyer crying in front of husband's house!

 

சமீப காலமாக வரதட்சணை கொடுமை அதிகாித்துவரும் நிலையில், காவல் நிலையங்களிலும் தினமும் வரதட்சணை புகாா்கள் பதிவாகிவருகின்றன. இந்தநிலையில், குமாி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிாியதர்ஷினிக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கோணம் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ராஜன் ரெஜீஸ்க்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

 

திருமணத்தின்போது 65 பவுன் தங்க நகை, கார், 25 சென்ட் நிலம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் என வரதட்சணையாக பிாியதர்ஷினியின் பெற்றோர்கள் கொடுத்தனர். இந்நிலையில், திருமணம் முடிந்த இரண்டு மாதத்திலேயே ராஜன் ரெஜீஸின் பெற்றோர்கள் இன்னும் கூடுதல் வரதட்சணை கேட்டு பிாியதர்ஷினியை கொடுமைப்படுத்த தொடங்கினார்கள். அந்தக் கொடுமையை சில நாட்கள் தாங்கிவந்த பிாியதர்ஷினி, கடைசியில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 

Dowry cruelty .... Female lawyer crying in front of husband's house!

 

புகாரின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்ததன் அடிப்படையில், ராஜன் ரெஜீசும் பிாியதர்ஷினியும் தனியாக வீடெடுத்து வசிக்க முடிவுசெய்து, ராஜன் ரெஜீஸ் வேலை செய்துவரும் கோணம் பகுதியில் வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக வசித்துவந்தனர். இதையடுத்து, கடந்த மூன்று தினங்களுக்கு முன் பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற ராஜன் ரெஜீஸ், பின்னர் வீடு திரும்பவில்லை. 

 

Dowry cruelty .... Female lawyer crying in front of husband's house!

 

பிாியதா்ஷினி, ராஜன்ரெஜீஸை செல்ஃபோனில் தொடர்புகொண்டபோது அவரது தாயார் ஃபோனை எடுத்து, “மேலும் 50 பவுன் நகை தந்தால்தான் உன் கணவா் உன்னோடு வாழ வருவார். இல்லையனில், அவருடன் வாழ முடியாது. நீ உன் பெற்றோரிடம் சென்றுவிடு” என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிாியதர்ஷினி, நேற்று (23.07.2021) வெள்ளிக்கிழமை முளகுமுடில் கணவர் வீட்டுக்கு வந்து கணவனைப் பார்க்க வேண்டுமென்று கேட்டபோது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. கணவனும் வீட்டு பின்வாசல் வழியாக குதித்து வெளியே ஓடிவிட்டார். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த பிாியதர்ஷினி, என்னோடு என் கணவரைச் சேர்த்து வையுங்கள் என கதறி அழுது நடுரோட்டில் புரண்டார். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களிடம், எனக்கு நியாயம் வாங்கிக் கொடுங்கள் என கெஞ்சி கண்ணீர் மல்க கேட்டது அனைவரையும் உறைய வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.