Skip to main content

ஸ்மார்ட் மீட்டர்கள் வேண்டாம்!! அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை உடைப்பு!

Published on 11/07/2018 | Edited on 13/07/2018

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவன கடைகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு  பொறுத்தப்பட்ட மீட்டர்களால் அதிக மின் கட்டணம் வருவதாக  கூறி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் புதியதாக பொறுத்தப்பட்ட சீனா மின் மீட்டரை அகற்றி மீண்டும் பழைய மீட்டரை பொறுத்த வேண்டுமென அதிமுக பேரவையில் வலியுறுத்தி வந்தது. 

 

smart meter

 

 

smart meter

 

 

 

இதனிடையே இன்று  சட்டமன்ற பேரவை கூடுவதற்கு முன்னதாக அதிமுக சட்டமன்ற  உறுப்பினர்கள்  அன்பழகன் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் புதியதாக பொறுத்தப்பட்ட மின் மீட்டரை கொண்டு வந்து  தரையில் போட்டு உடைத்து எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்போது  பேசிய சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் புதுச்சேரி மாநிலத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ள நிலையில்14 ஆயிரம் மதிப்பில் முதற்கட்டமாக 34 ஆயிரம் மீட்டர்கள் சீனாவில் இருந்து பெறப்பட்டு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொறுத்தப்பட்டுள்ளதால் கூடுதலாக மின் கட்டணம் வருவதாக அரசுக்கு தெரிவித்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் சீனாவில் இருந்து வாங்கப்பட்ட சீனா ஸ்மார் மீட்டரில் ஊழல் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.இதானால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.