Skip to main content

தி.மு.க. எம்.பி. மீதான கொலை வழக்கு- வெளியானது எஃப்.ஐ.ஆர். விவரங்கள்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

DMK MP Murder case against: FIR filed details!

 

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளியானது. அதில், கொல்லப்பட்ட கோவிந்தராசு ஏழு ஆண்டுகளாக கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றினார். கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும் ரத்தக் கரையும் இருந்ததால் அவரது மகன் புகார் அளித்தார். கடந்த செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று அதிகாலை எம்.பி.ரமேஷின் உதவியாளர், கோவிந்தராசுவின் மகனுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.  

 

அதன் அடிப்படையில், கடலூர் எம்.பி. டி.ஆர்.வி. ரமேஷ் மற்றும் அவரது தனி உதவியாளர் நடராஜன் கந்தவேல், அல்லா பிச்சை மற்றும் வினோத், முந்திரி ஆலையில் பணிபுரியும் ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் கோவிந்தராசுவை ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுக்கூடி அடித்துக் கொன்றுள்ளனர். அவர்கள் மீது சட்டப்பிரிவுகள் 302 (கொலைக்குற்றம்), 120 பி (சதி செய்தல்), 147, 149, 341, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

கோவிந்தராசுவின் உடலில் இடது கண்ணில் காயமும், மூக்கில் ரத்தம் வடிந்த சுவடும் இருந்தது. ஒருவாரமாக முந்திரி ஆலையில் தனக்கு பிரச்சனை என தெரிந்தவர்களிடம் கோவிந்தராசு கூறி வந்துள்ளார். அவரது உடலில் பூச்சி மருந்து கலந்ததற்கான தடயமும் இருந்தது. கோவிந்தராசுவின் ரத்தத்தில் எத்தில் ஆல்கஹால் அளவு 161 மி.கி. இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது சட்டை, வாய்ப்பகுதியில் பச்சை நிறத்தில் திரவம் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இவ்வாறு முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.