Skip to main content

பாஜகவை அகற்றும் ஒருங்கிணைப்பிற்கு திமுக முழு ஆதரவு!! -ஸ்டாலின்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு அண்மையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

 

அதன் அடிப்படையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் பொழுது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

இந்த சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

 

dmk

 

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

மாநில உரிமைகள் மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒன்று சேர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாஜக ஆட்சியை அகற்ற ஒன்றிணைய வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, சிபிஐ ஆக இருந்தாலும் சரி சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படக் கூடிய அந்த அமைப்புகளை கூட மிரட்டுகிற, அச்சுறுத்துகிற வகையில் பிஜேபி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இதைத்தடுக்க வேண்டும். உடனடியாக பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் இருக்கக்கூடிய தலைவர்களும்  முதலமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சிக்கு திமுக ஆதரவு வேண்டுமென அவர் நேரடியாக என்னை சந்தித்துள்ளார். இந்த முயற்சிக்கு திமுக முழுமையாக ஆதரவு கொடுக்கும் என நம்பிக்கை அளித்திருக்கிறேன் என கூறினார்.

 

அதனை எடுத்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,

 தமிழகத்தில் ஆட்சியே ரிமோட் கண்ட்ரோலில் தான் செயல்படுகிறது. மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இங்கு ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது. பாஜகவிற்கு எதிர்க் கட்சி காங்கிரஸ்தான் எனக் கூறினார் எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.