Skip to main content

வாக்காளர்களைப் பயமுறுத்திய திமுக வேட்பாளர்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

DMK candidate intimidates voters ... !!

 

கடலூர் தொகுதி ஸ்டார் தொகுதியாகப் பார்க்கப்படுகிறது காரணம் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக சார்பில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் போட்டி போடுகிறார். இவர்களோடு நாம் தமிழர் கட்சி சார்பில் கடல் தீபன், தேமுதிக சார்பில் ஞானபண்டிதன், மக்கள் நீதி மையம் சார்பில் ஆனந்தராஜ் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இருந்தும் திமுக வேட்பாளர் ஐயப்பன் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சம்பத் இருவருக்குமிடையே தான் பிரதானப் போட்டி நிலவி வருகிறது.

 

தற்போது ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தங்களது கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்த சலுகைகளையும் திட்டங்களையும் தாண்டி தங்கள் மனதுக்குப் பட்டதை எல்லாம் நிறைவேற்றித் தருவதாக மக்களிடம் மூட்டை மூட்டையாக வாக்குறுதிகளை வாரி வழங்கி வாக்குகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன் மக்களை நகைச்சுவையாகப் பயமுறுத்தி வித்தியாசமாக வாக்கு கேட்டுள்ளார். நேற்று பிரச்சாரத்திற்குச் சென்ற ஐயப்பன் சுத்து குளம் என்ற பகுதியில் வாக்கு கேட்டு திறந்த ஜீப்பில் மைக்கில் பேசியபடி சென்று கொண்டிருந்தார். ஏராளமான பெண்களைப் பார்த்ததும் பிரசார வாகனத்தை நிறுத்திய அவர் அந்தப் பெண்களிடம் பேச ஆரம்பித்தார். ஓட்டு போடச்சொல்லி உங்களுக்கு ஏற்கனவே பணம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள் என்றதும் பெண்கள் அப்படி யாரும் எங்களுக்குப் பணம் தரவில்லை என்று  பதில் கூறுகின்றனர். 

 

அதையடுத்து ஐயப்பன் "ஓட்டு போடச்சொல்லி இன்றோ நாளையோ உங்களைத் தேடிவந்து பணம் தருவார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்க வேண்டாம் என்று நான் கூறவில்லை ஆனால் அப்படி வாங்கப்பட்ட பணத்தை வரும் ஆறாம் தேதி வரை யாரும் செலவு செய்யக்கூடாது. வீட்டிலுள்ள பெண்களது கணவர்களுக்குத் தெரிந்தால் அதை எடுத்துச் செலவு செய்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கும் தெரியாமல் பணத்தைப் பத்திரமாக மறைத்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். வரும் ஆறாம் தேதி  தேர்தல் அன்று உதயசூரியன் சின்னத்திற்கு அனைவரும் வாக்களித்த பிறகு அந்தப் பணத்தை எடுத்து நீங்கள் தாராளமாகச் செலவு செய்யலாம்.

 

DMK candidate intimidates voters ... !!

 

அதற்குள் அந்தப் பணத்தை எடுத்து நீங்கள் செலவுசெய்து வாக்கை மாற்றிப் போட்டால் உங்களுக்கு வாந்தி பேதி வரும் பாத்துக்குங்க. அந்த மாதிரி கேரள மந்திரவாதிகள் வச்சு செஞ்சுருக்கோம்" என்று கூற கூடியிருந்த பெண்கள் சிரித்தனர். "இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். அவர்கள் மாந்திரீகம் செய்யப் போகிறார்கள்" என்று அவர் கூறியதை பெண்கள் ரசித்து சிரித்தாலும், "திமுகவில் தற்போது முக்கியத் தலைவர்களின் குடும்பத்தினர் கோயில் கோயிலாகச் சென்று இறைவழிபாடு நடத்தி வருகிறார்கள். அது அவர்களது உரிமை என்று தலைவர்கள் ஒரு நியாயம் கூறுகிறார்கள். இப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் ஓட்டுப் போடாவிட்டால் வாந்தி பேதி வரும் என்று சொல்கிறார்" என்கிறார்கள் விமர்சிப்பவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.