Skip to main content

திருச்சியில் தினகரன் அணியை உலுக்கிய பிளக்ஸ் பேனர் ! 

Published on 26/08/2018 | Edited on 26/08/2018
ttv

 

அ.தி.மு.க. கட்சியிலிருந்து தனியே பிரிந்து தினகரன் அணி தனிகட்சி தனிக்கொடி அறிவித்து தமிழகம் முழுவதும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை என்று அ.தி.மு.க. கட்சியினருக்கு சரிக்கு சரியாக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் திருச்சியில் அ.தி.மு.க.வில் இருந்த முக்கிய புள்ளியாக இருந்த சீனிவாசன், மனோகரன், சாருபாலாதொண்டைமான், ராஜசேகரன் என பெரிய பட்டாளமே தினகரன் அணிக்கு சென்றவுடன் அப்போது மா.செ.வாக இருந்த வெல்லமண்டி நடராஜன் தினகரன் அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் வயது மூப்பை காரணமாக சொல்ல.. உடனே திருச்சி எம்.பி.குமாரை புதிய மாவட்ட செயலாளராக அறிவித்து அ.தி.மு.க. கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

 

இந்த நேரத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் முக்கிய எதிர்கட்சியான தி.மு.க. கூட இந்த தேர்தலில் அமைதியை கடைபிடித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தினகரன் அணியினர் அனைத்து கூட்டுறவு சங்கத்திலும் நேரடியாக தேர்தலுக்கு போட்டி போட்டனர். இது பெரிய பரபரப்பை திருச்சியில் ஏற்படுத்திய நிலையில் திருச்சியில் நேற்று முக்கிய வீதிகளில் திவாகரன் என்ன தியாகியா என்கிற பெயரில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இது தினகரன் அணிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

அதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கா.பி.போசா, அண்ணியசெலவானி மோசடி, தினகரன் தீய சக்தி என்று பேனர் முழுவதும் தினகரன் பற்றி சித்திரகுப்தன் என்கிற பெயரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்டம் என்று பேனர் வைத்திருந்தது தினகரன் அணியினரை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

பேனர் தகவல் வெளியானவுடன் தினகரன் அணியை சேர்ந்த சீனிவாசன், சாருபாலா, ராஜசேகரன் மனோகரன் ஆகியோர் திருச்சி போக்குவரத்து டிசி மயிவாகணனை சந்தித்து தினகரனை கேலி செய்து சித்திரம் வரைந்து மாநகர் முழுவதும் பேனர்கள், சுவரொட்டிகள், வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள். 

 

அரசியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆளும் கட்சியினர் வைத்திருக்கும் பிளக்ஸ் பேனர் பிரச்சனை போலீசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி யிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.